$
பலர் கோடை விடுமுறையை எதிர்பார்த்து விடுமுறையில் வெளியே செல்லவும், உறவினர்களைப் பார்க்கவும் காத்திருக்கிறார்கள். அப்படி வெளியில் செல்ல நினைத்தால் ஒரு பக்கம் வெயில் அடிக்கும் போது இன்னொரு பக்கம் கண் பிரச்னைகள் ஏற்படுகிறது.
கோடைக்காலத்தில் பலருக்கு வெண்படல அழற்சி ஏற்படுகிறது. இது "இளஞ்சிவப்பு கண்" என்றும் அழைக்கப்படுகிறது. உங்களின் கோடை விடுமுறைக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்க அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்வது நல்லது.

மெட்ராஸ் ஐ ஏன் ஏற்படுகிறது?
மெட்ராஸ் ஐ பொதுவாக வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது ஒவ்வாமைகளால் ஏற்படுகிறது. குறிப்பாக கோடையில் அதிகமாக வெளிப்படும். வெப்பமான காலநிலை காரணமாக கண் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, மெட்ராஸ் ஐ, கண் வீக்கம் ஏற்படுகிறது.
கோடை வெயிலில் வெளியில் அதிக நேரம் செலவிடுவதும், மற்றவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதும் வைரஸ் மற்றும் பாக்டீரியா வடிவில் கண் தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக நீச்சல் குளங்கள் மற்றும் கடற்கரைகளில் வெண்படல நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மெட்ராஸ் ஐ அறிகுறிகள்
- சிவப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள்.
- வீங்கிய கண் இமைகள்.
- கண்களில் எரிச்சல்
- கண் வலி
- கண்களில் அரிப்பு
- வெளிச்சத்தை பார்ப்பதில் கடினம்

மெட்ராஸ் ஐ தடுப்பு குறிப்புகள்
- கண்களை அடிக்கடி தொட்டு தேய்க்க வேண்டாம்
- அடிக்கடி கைகளை கழுவவும்.
- தலையணை கவர்கள் மற்றும் டவல்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.
- நீச்சலடிக்கும்போது கண்ணாடி அணிய வேண்டும்.
- மெட்ராஸ் ஐ உள்ளவர்கள் நீந்தக்கூடாது.
- ஒவ்வாமையைத் தவிர்க்கவும்.
குறிப்பு
இந்த இணையதளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சுகாதார தகவல்களும், மருத்துவ குறிப்புகளும் மற்றும் பரிந்துரைகளும் உங்கள் தகவலுக்காக மட்டுமே. இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.