Coconut And Amla Oil: ஆம்லா பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடிக்கு பயன்படுத்தலாமா?

  • SHARE
  • FOLLOW
Coconut And Amla Oil: ஆம்லா பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடிக்கு பயன்படுத்தலாமா?


Benefits Of Amla And Coconut Oil For Hair: ஆரோக்கியமான மற்றும் அழகான முடி வளர்ச்சிக்கு பலரும் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை உண்மையில் பாதுகாப்பானதா? என்ன மாதிரியான விளைவுகளைத் தரும்? என்பது குறித்து அறிந்து கொள்வதில்லை. எனினும், இன்னும் சிலர் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தி முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றனர். அந்த வகையில், இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பல்வேறு பொருள்களில், நெல்லிக்காய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய்த் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டுமே முடி ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழும். உண்மையில், நெல்லிக்காய் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையானது மயிர்க்கால்களைத் தூண்டி, உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது. மேலும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய்த் தூள் கலவை தரும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அடர்த்தியான கூந்தலுக்கு ஆப்பிள் சைடர் வினிகரை இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க

முடி வளர்ச்சிக்குக்கு நெல்லிக்காய்த் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகள்

இயற்கையான முடி பராமரிப்பு முறையில் தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய்த் தூள் கலவை பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் பவுடர் இரண்டிலுமே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதன் படி, தேங்காய் எண்ணெயில் வைட்டமின் கே, ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதன் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் முடி சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் இந்திய நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையும் முடி ஆரோக்கியத்திற்குத் தேவையானவையாகும். இந்த இரு பொருள்களையும் கலந்து பயன்படுத்துவது உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதுடன், ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

முடி உதிர்வதைத் தடுக்க

தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள் இரண்டுமே முடி உதிர்தல் பிரச்சனைக்கும், மெலிந்து போவதைத் தடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்றவை முடியின் வேர்களை வலுப்படுத்தி, முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது. அதே சமயம், தேங்காய் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது.

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு

தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள் கலவையானது ஒரு சிறந்த ஸ்கால்ப் கண்டிஷனராக செயல்படுகிறது. இவை உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கிறது. மேலும், வறட்சி மற்றும் பொடுகைத் தடுக்கிறது. நெல்லிக்காய் பவுடரில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள், உச்சந்தலை தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதே போல், தேங்காய் எண்ணெயில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் உச்சந்தலையைக் குளிர்விப்பதுடன், அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க உதவுகிறது.

முடி அமைப்பை மேம்படுத்த

நெல்லிக்காய் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெயைத் தவறாமல் முடிக்குப் பயன்படுத்துவது அதன் ஒட்டு மொத்த அமைப்பு மற்றும் பளபளப்பை மேம்படுத்துகிறது. நெல்லிக்காய் தூள் முடி வெட்டுக்காயங்களை அடைத்து, முடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. அதே சமயத்தில் தேங்காய் எண்ணெய் முடி இழைகளுக்கு ஒரு பளபளப்பான அமைப்பைச் சேர்க்கிறது. மேலும் இது ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Powder: பொசு பொசுனு முடி வளர செம்பருத்தி பவுடரை இந்த பொருள்களோட யூஸ் பண்ணுங்க

இயற்கையான முடி தீர்வாக

கடுமையான இரசாயன சேர்க்கைகளைக் கொண்ட முடி பராமரிப்புப் பொருள்களைப் போலல்லாமல், தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள் கலவையைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் இயற்கையான தீர்வாக அமைகிறது. மேலும், இது இரசாயனமற்ற மாற்றாக அமைகிறது. இது உணர்திறன் வாய்ந்த உச்சந்தலை உட்பட அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றதாக அமைகிறது.

முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு

நெல்லிக்காயில் உள்ள பண்புகள் முடியின் மயிர்க்கால்களைத் தூண்டி, விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, தேங்காய் எண்ணெய் முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி, முடியை உள்ளே இருந்து வலுப்படுத்துகிறது. மேலும் முடி உடைவதைத் தடுக்கிறது. இதனால் நீண்ட மற்றும் வலுவான முடி இழைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பயன்படுத்த எளிதானதாகும்

நெல்லிக்காய் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெயை முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது எளிதானது மற்றும் வசதியானதும் ஆகும். தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்குவதன் மூலம் எளிதாக ஹேர் பேக் செய்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். பிறகு சில மணிநேரங்கள் அல்லது ஓரிரவு அப்படியே வைத்து லேசான ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு நெல்லிக்காய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையானது, முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் உதவுகிறது. மேலும் முடியின் மயிர்க்கால்களைத் தூண்டுவது முதல் முடி உதிர்வதைத் தடுப்பது வரை பல பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இது தவிர, முடிக்கு பளபளப்பை மேம்படுத்த உதவுகிறது. எனவே தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள் கலவையைப் பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Amla For Hair: பொடுகுத் தொல்லை நீங்க நெல்லிக்காயுடன் இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Hairfall After Delivery: பிரசவத்திற்கு பின் முடி கொட்டுகிறதா.? இதை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்