
எல்லோருக்கும் முடி பிடிக்கும். ஏனெனில் கூந்தல் அழகு தருகிறது. அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீளமான கூந்தலைப் பெற அனைவரும் விரும்புகிறார்கள். இருப்பினும், முடி அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சிறு வயதிலேயே முடி உதிர்வதும், நரைப்பதும் இன்றைய காலத்தில் பெரும் பிரச்சனையாகி விட்டது. மரபணு குறைபாடுகள், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், தூசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
முப்பது வயதை எட்டும் முன்பே தலை முழுவதும் வெள்ளை முடியுடன் தோன்றுபவர்கள் ஏராளம். சிலர் இந்த பிரச்சனையை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இது சிலருக்கு மிகப்பெரிய மன உளைச்சலைக் கொடுக்கிறது. மருதாணி, ஹேர் டை என சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்கள் வெள்ளை முடியை கருப்பாக்கி வருகின்றனர்.
ஆனால் இதிலுள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. இவை முடியை சேதப்படுத்தும். எனவே கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்தி முடியைக் கருப்பாக்க வீட்டிலேயே ஹேர் ஆயில் தயாரிக்கலாம் வாங்க.
கடுகு எண்ணெய் பயன்படுத்துவது ஏன்?
கூந்தல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கடுகு எண்ணெய் ஒரு மேஜிக் பொருள். இதில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. கடுகு முடி எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவது பொடுகு மற்றும் முடி உதிர்வதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. கடுகு எண்ணெய் நரைமுடியை கருப்பாக்குவதிலும் சிறப்பாக செயல்படக்கூடியது.
தேவையான பொருட்கள்:
- கடுகு எண்ணெய் - ஒரு கப்
- கற்றாழை ஜெல் - இரண்டு டீ ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
- கறிவேப்பிலை - 10-15 இலைகள்
- நெல்லிக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
- கருப்பு எள் - ஒரு டீஸ்பூன்
- வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
- முதலில் கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.
- அந்த எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போடவும்.
- வெங்காயம் வெளிர் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- அதன் பிறகு அலோ வேரா ஜெல் சேர்க்கவும், பின்னர் நெல்லிக்காய் தூள், கருப்பு எள், வெந்தயம் சேர்க்கவும்.
- இந்த முழு கலவையையும் குறைந்த தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
- கட்டியாக இல்லாமல் நன்றாக கலக்கவும்.
- அதன் பிறகு அடுப்பை அணைத்து, எண்ணெய் ஆறிய பிறகு வடிகட்டி பாட்டிலில் நிரப்ப வேண்டும்.
கடுகு எண்ணெயில் கலக்கப்படும் பொருட்களின் நன்மைகள்:
வெள்ளை முடியை கருப்பாக்க:
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் தூள் இயற்கையான முடி சாயமாக செயல்படுகிறது. இவை முடியை கருப்பாக வைத்திருக்க உதவும்.
முடி உதிர்வை குறைக்கிறது:
வெங்காயத்தில் உள்ள கந்தகமும், வெந்தயத்தில் உள்ள புரதமும் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வது குறையும்.
அடர்த்தியான, பளபளப்பான முடி:
கற்றாழை மற்றும் கருப்பு எள்ளில் முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து:
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முடி நன்றாக வளரும்.
இந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவது எப்படி?
இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போது, சிறிது சூடாக்கி, முடியின் வேர்களில் நன்கு தடவவும். பின்னர் மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பிறகு இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கவும். பகலில் பயன்படுத்தினால், மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை வைத்திருங்கள். பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
Image Source: Freepik
Read Next
Winter hair mask: குளிர்காலத்தில் வறண்ட முடியை ஈரப்பதமாக்க இந்த ஹேர் மாஸ்க்குகளை ட்ரை பண்ணுங்க
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version