
இன்றைய காலத்தில், முடி உதிர்தல், வறட்சி மற்றும் முடி உடைதல் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதிலேயே பலர் இந்த பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கக் குறைவு, மாசு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள். தலைமுடியை இயற்கையாக மென்மையாக்கவும், பளபளப்பாகவும் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் சிறந்த இயற்கை தீர்வாகும். இதை சில சிறப்பு பொருட்களுடன் கலந்தால், அதின் நன்மை இரட்டிப்பாகும்.
“தேங்காய் எண்ணெய் தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இதனுடன் இயற்கை பொருட்களை சேர்த்தால், முடி ஆரோக்கியம் வேகமாக மேம்படும்” டெல்லி ரஜோரி கார்டனில் உள்ள காஸ்மெடிக் ஸ்கின் கிளினிக் தோல் நிபுணர் டாக்டர் கருணா மல்ஹோத்ரா கூறுகிறார்.
1. தேங்காய் எண்ணெய் + கற்றாழை
கற்றாழை சாறை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவுவது, வறட்சியை நீக்கி முடி உடைதலைத் தடுக்கிறது. இது தலையின் ஈரப்பதத்தை பராமரித்து, முடியை இயற்கையாக மென்மையாக்குகிறது.
எப்படி செய்வது:
ஒரு டீஸ்பூன் கற்றாழை சாறை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கி மெதுவாக தலையில் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூவால் கழுவவும்.
2. தேங்காய் எண்ணெய் + தேன்
தேன் இயற்கையான ஈரப்பதம் தாங்கி. தேங்காய் எண்ணெயுடன் சேர்ந்து முடிக்கு பளபளப்பை அளிக்கிறது. இது தலையின் உலர்ந்த தோலை ஈரப்பதமாக்குகிறது.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் தேனுடன் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலக்கி தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் விட்டு மிதமான நீரில் கழுவவும்.
3. தேங்காய் எண்ணெய் + முட்டை
முட்டையில் உள்ள புரதம் முடி வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து. இது முடியை வலுப்படுத்தி, பிளவு முனைகளை சரி செய்கிறது.
செய்முறை:
ஒரு முட்டை மஞ்சள் கருவை இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கி தலையில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
4. தேங்காய் எண்ணெய் + தயிர்
தயிர் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் முடி மென்மையாகவும் சீராகவும் மாறும்.
செய்முறை:
அரை டீஸ்பூன் தயிரை இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கி தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும்.
5. தேங்காய் எண்ணெய் + வெந்தயத் தூள்
வெந்தயத்தில் உள்ள லெசிதின் மற்றும் புரதம் முடி வேர்களை வலுப்படுத்தி உதிர்தலைக் குறைக்கிறது. இது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் வெந்தயம் தூளை இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து சூடேற்றி குளிர்ந்தபின் தலையில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து துவைக்கவும்.
இறுதியாக..
தேங்காய் எண்ணெயுடன் இந்த இயற்கை பொருட்களை சேர்த்துப் பயன்படுத்துவது, உங்கள் தலைமுடியை பட்டு போல மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல், முடி உதிர்தல், பொடுகு மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாக்கும். இவை அனைத்தும் வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய இயற்கை தீர்வுகள். தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி இயற்கையாக பிரகாசிக்கும்.
Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஏதேனும் அலர்ஜி அல்லது தோல் பிரச்சனை இருந்தால், வீட்டிலேயே சோதனை செய்யாமல், உங்கள் தோல் நிபுணரை அணுகவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 13, 2025 09:13 IST
Published By : Ishvarya Gurumurthy