Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Hibiscus Powder: பொசு பொசுனு முடி வளர செம்பருத்தி பவுடரை இந்த பொருள்களோட யூஸ் பண்ணுங்க

How To Use Hibiscus Powder For Hair Growth: இன்று பலரும் முடி ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மென்மையான மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் இர்சாயனங்கள் கலந்திருக்கலாம். இதைத் தவிர்க்க, சில ஆரோக்கியமான இயற்கை முறைகளைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் முடி மென்மையாக மற்றும் அடர்த்தியாக வளர செம்பருத்தி பவுடரைப் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் முடி வளர்ச்சியைத் தூண்டும் மூலிகைகளில் செம்பருத்தியும் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது. தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க செம்பருத்தி தூள் பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாக அமையும். முடி உதிர்தல் பிரச்சனை கொண்டவர்களுக்கு செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள் இரண்டுமே உதவுகிறது. இதில் கூந்தலுக்கு செம்பருத்தி பவுடரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.

தலைமுடியில் செம்பருத்தி பவுடரை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள்

தலைமுடிக்கு செம்பருத்தியைப் பயன்படுத்துவதில் நேர்மறையான முடிவுகளைத் தருகிறது. இது செயலற்ற மயிர்க்கால்களை முழுமையாக குணப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. தலைமுடிக்கு செம்பருத்தி பொடியைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.

செம்பருத்தி பொடியை மட்டும் பயன்படுத்துவது

செம்பருத்தி தூளை மட்டும் நேரடியாக தலைமுடிக்கு பயன்படுத்தலாம். அதன் படி, செம்பருத்தி பொடியை பயன்படுத்துவது தலைமுடிக்கு ஒரு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது தலைமுடியை மிகவும் மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த செம்பருத்திப் பூக்கள் அல்லது 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்திப் பொடியை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • தண்ணீர் ஆறிய பிறகு இதை வடிகட்டவும்.
  • தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு செம்பருத்தி தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
  • மேலும் மிருதுவான முடியைப் பெற வாரம் ஒரு முறை இந்த முறையைச் செய்யலாம்.

தேங்காய் பாலுடன் செம்பருத்தி தூள்

தலைமுடியை ஆழமாக நிலைநிறுத்தவும், மென்மை மற்றும் பளபளப்பை மேம்படுத்தவும் செம்பருத்தி தூள் மற்றும் தேங்காய் பால் ஹேர் மாஸ்க் செய்யலாம். இதில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ள்ள கெரட்டின் கட்டுமானத் தொகுதிகளாகும். இவை முடியை உருவாக்கும் புரதமாகும். இது முடியை வேர்களிலிருந்து வலுப்படுத்துவதுடன், உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • செம்பருத்தித் தூளுடன் தேங்காய் பாலை சம பாகங்களைக் கலந்து, எளிதான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
  • இந்த கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இது வேர் முதல் நுனி வரை நன்றாக மேலடுக்காக இருக்குமாறு வைக்கலாம்.
  • இதை குறைந்தது 30 நிமிடங்களுக்கு விட்டு, பிறகு ஷாம்பூவின் உதவியுடன் கழுவி விடலாம்.
  • சிறந்த முடிவுகளைப் பெற இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை ஜெல்லுடன் செம்பருத்தி பவுடர்

செம்பருத்தி பூ பொடியில் வைட்டமின் ஏ, சி இரும்பு, தாதுக்கள், கால்சியம், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை முடி வளர்ச்சியைத் தூண்டுவதிலும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • செம்பருத்திப் பொடியுடன் கற்றாழை ஜெல் மற்றும் சில துளிகள் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் போன்றவற்றை கலந்து பேஸ்ட்டைத் தயாரிக்க வேண்டும்.
  • இந்தக் கலவையை கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தடவி, வட்ட இயக்கங்களில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • சுமார் 20-30 நிமிடங்கள் விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • சிறந்த முடிவுகளைப் பெற வாரம் இருமுறை இந்த ஹேர்பேக்கைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth: நீளமான மற்றும் கருமையான கூந்தலுக்கு செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது?

ஆலிவ் எண்ணெயுடன் செம்பருத்தி பொடி

கூந்தலுக்கு செம்பருத்தி தூள் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவை பயன்பாடு உலர்ந்த மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆலிவ் எண்ணெயில் நிரப்பப்பட்ட கொழுப்பு அமிலங்கள் முடி ஆரோக்கிய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

பயன்படுத்தும் முறை

  • ஆலிவ் எண்ணெயுடன் செம்பருத்தி பொடியைக் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
  • பின் தலைமுடியில் தடவ வேண்டும். குறிப்பாக முடியின் முனை மற்றும் சேதமடைந்த பகுதிகளில் தடவலாம்.
  • பிறகு தலைமுடியை ஒரு ஹீட் டவலில் போர்த்தி, ஆழமான கண்டிஷனிங்கிற்காக குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் அல்லது ஒரே இரவில் அதை விட்டு விடலாம்.
  • அதன் பிறகு இதை மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். மென்மையான வண்ணமயமான கூந்தலைப் பெற வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

தயிருடன் செம்பருத்தி தூள்

செம்பருத்தி அதன் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இதனால் இது பொடுகுக்கு ஒரு சக்திவாய்ந்த இயற்கை சிகிச்சையாக பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

  • தயிர் மற்றும் செம்பருத்தி பொடியை நன்றாகக் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
  • பின் இதை உச்சந்தலை மற்றும் வேர்களில் தடவ வேண்டும்.
  • இதை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு மிதமான ஷாம்பூ பயன்படுத்தி கழுவ வேண்டும்.
  • இந்த ஹேர்பேக்கின் வழக்கமான பயன்பாடு பொடுகை கணிசமாகக் குறைக்கவும், உச்சந்தலையில் தொற்றுநோயைத் தணிக்கவும் உதவுகிறது.

இவ்வாறு செம்பருத்தி பொடியை வைத்து தயார் செய்யப்படும் ஹேர்பேக்குகளைப் பயன்படுத்துவது முடி உதிர்தல், பொடுகு, முடி வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. அதே சமயம், மென்மையான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Hibiscus Shampoo: நீளமா, அடர்த்தியா, மொத்தமா முடி வேணுமா? செம்பருத்தி ஷாம்பு யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Hair Fall Remedy: ஓவர முடி கொட்டுதா.? இதை மட்டும் ஃபாளோ பண்ணுங்க.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content