Home Made Face Packs Effective In Scorching Summers: கோடைக்காலம் என்றாலே சரும பராமரிப்பு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் கோடைக்காலத்திலேயே சரும பிரச்சனைகளை பலரும் எதிர்கொள்ள வேண்டி வரும். வீக்கம், முகப்பரு, முகம் வறட்சியடைதல், எரியும் உணர்வு, அரிப்பு உள்ளிட்ட பல சரும பிரச்சனைகள் இந்த காலகட்டத்திலேயே எதிர்கொள்ள வேண்டி வரும்.
இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, பலரும் சந்தைகளில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் உள்ள இரசாயன விளைவுகளால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே இயற்கையாக சருமத்தைக் குளிர்ச்சியாக வைக்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம். இவை கோடையில் சருமத்தை குளிர்ச்சி மிக்கதாகவும், தெளிவான சருமத்தை வழங்கக் கூடியதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Water For Skin: முகம் பளிச்சினு மாற, இளநீரை இப்படி யூஸ் பண்ணுங்க
சருமத்திற்கு குளிர்ச்சி தரும் ஃபேஸ் பேக்குகள்
மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
தேன், மஞ்சள் இவை இரண்டுமே ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் கொண்டதாகும். இவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த பண்புகள் சருமத்தை கோடைக்காலத்திற்கு ஏற்றவாறு குளிர்ச்சியைத் தரும் வகையிலும், பல்வேறு சரும பிரச்சனைகளை போக்கும் வகையிலும் அமைகிறது. மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக் குளிர்ச்சியான மற்றும் நிதானமான விளைவைத் தர இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டி மற்றும் ரோஸ்வாட்டர்
இவை இரண்டுமே சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இது எந்தவித இரசாயனங்களும் இல்லாத எளிமையாக வீட்டிலேயே தயார் செய்யப்படக்கூடிய ஒரு இயற்கையான தீர்வாகும். இவை சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைக்க உதவுவதுடன், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய, இரண்டு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டியுடன், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
மஞ்சள், கடலைமாவு மற்றும் வெள்ளரி
கடலைமாவு, மஞ்சள் மற்றும் வெள்ளரி கொண்டு தயார் செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக் முகப்பரு மற்றும் வீக்கத்தைக் குறைப்பதுன், சருமத்தில் ஏற்படும் நீரிழப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. கடலைமாவுடன், மஞ்சள் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்ற உதவுகிறது. மேலும் வெள்ளரியைப் பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிப்பதுடன், தோல் வெடிப்புகளைக் குளிர்விக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Rice Water: உடைந்தது Korean Beauty Secret.. அரிசி நீரை இப்படி பயன்படுத்தி பாருங்க!
பால் மற்றும் சந்தன பவுடர்
சந்தனத் தூள் சருமத்திற்கு சிறந்த நன்மையைத் தருகிறது. இது முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் பாக்டீரியாவை நீக்குகிறது. முதுமை அறிகுறிகளை நீக்கி சுருக்கங்களைக் குறைக்கிறது. இது வறண்ட சருமத்தின் பிரச்சனைகளை எளிதில் நீக்குகிறது. பாலுடன் சந்தன பவுடர் கலந்து அருந்துவது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருவதுடன், ஆரோக்கியமான சருமத்தைத் தருகிறது.
தயிர் மற்றும் அரிசி
சரும பராமரிப்பில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசியுடன் தயிர் கலந்து சருமத்திற்கு பயன்படுத்துவது கோடைக்கால மந்தத்தை நீக்குகிறது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தந்து பளபளப்பைத் தருகிறது. இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்திற்கு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti For Face: முல்தானி மிட்டியை இப்படி பயன்படுத்துனா இந்த சரும பிரச்சனைகளே வராதாம்
Image Source: Freepik