How To Improve Eyesight Naturally Ayurveda: உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக கண்கள் உள்ளது. இது மிகவும் நுட்பமான உணர்வு உறுப்புகளில் ஒன்றாகும். எனவே தான் கண்களுக்கு சிறப்பான எச்சரிக்கை மற்றும் கவனிப்பு தேவைப்படுகிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் திரைகள் பயன்பாடு மிக அதிகளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் கணினி, லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றில் நேரம் காலம் தெரியாமல் அதிகளவு ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
ஆனால், இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பலரும் விழிப்புணர்வற்று உள்ளனர். குறிப்பாக இந்த அதீத பயன்பாடு கண்களைப் பாதிக்கலாம். சுற்றுச்சூழல் அசுத்தங்கள், புற ஊதா சேதம், ஒவ்வாமை, வயது தொடர்பான மாகுலர் சிதைவு, நீரிழிவு ரெட்டினோபதி, கிளைகோமா போன்ற பல்வேறு கண் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழக்கத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds For Brain: மூளைத் திறனை அதிகரிக்க இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க
ஆயுர்வேதத்தில் கண் பராமரிப்பு முறைகள்
ஆயுர்வேதத்தின் படி, மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவை கண் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால், கண் அரிப்பு, எரிச்சல், வறட்சி போன்ற பல்வேறு கண் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க ஏராளமான இயற்கை வைத்தியங்கள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. பார்வை மேம்பாட்டிற்கு பெரும்பாலும் ஆயுர்வேத சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளைக் காணலாம்.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்
ஆரோக்கியமான உணவு
வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ, புரதங்கள், வைட்டமின்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமநிலையான உணவு கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது. அதன் படி தேன், கோதுமை, நெய், பச்சை திராட்சை போன்றவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
அஞ்சனா மற்றும் நஸ்யா
கண்கள் பெரும்பாலும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படலாம். அஞ்சனா மற்றும் நாஸ்யா போன்றவற்றின் வழக்கமான பயன்பாடு கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது அதிகப்படியான கபாவை அகற்றவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க
த்ராடகா
இது ஒரு ஆயுர்வேத கண் பயிற்சியாகும். இந்த பயிற்சியானது எரியும் நெய் விளக்கைப் பார்ப்பதாகும். இதில் இருளான அறை ஒன்றில் அமர்ந்து 30 டிகிரி கோணத்தில் நெருப்பு தெரியும் படி, நெய் விளக்கை ஏற்றி அமர்ந்து அதைச் சீராக பார்க்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடம் பார்க்க வேண்டும். இது அவர்களின் கண் வலிமை மற்றும் பார்வையை வலுப்படுத்த உதவுகிறது.
பாதத்தில் மசாஜ் செய்வது
கண் பார்வை மேம்பாட்டிற்கு கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வது மிகுந்த நன்மை பயக்கும்.
திரிபலா
திரிபலா என்பது மூன்று பழங்களின் கலவையாகும். இது கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் பழங்கால சிகிச்சையாகக் கருதப்படுகிறது. திரிபலாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. கண்களில் உள்ள திசுக்களை புதுப்பிக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கவும் உதவுகிறது. பல்வேறு கண் நோய்களுக்கு திரிபலா எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாகும்.
இந்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dry Dates Benefits: உடல் வலிமையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க
Image Source: Freepik