$
தினமும் காலை எழுந்த உடன் என்ன சாப்பாடு செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா.? அதுவும் ருசியுடன் சேர்ந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.? அப்போ கம்பு தோசை சூப்பர் தேர்வாக இருக்கும்.! இது கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கும்.
கம்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன.? கோடையில் கம்பு தோசை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.? என்பதை இங்கே காண்போம்.
கம்பு நன்மைகள் (kambu benefits)
- கம்பு இரும்புச்சத்து நிரம்பிய ஒரு உயர் ஆற்றல் உணவு. அரிசியில் இருப்பதை விட 8 மடங்கு இரும்புச்சத்து கம்பில் அதிகம் உள்ளது. கம்பில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது இரத்த சோகையைத் தடுக்கிறது.

- நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், ஃபோலிக் அமிலம், அமினோ அமிலங்கள், லெசித்தின், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் உள்ள நியாசின் கொழுப்பைக் குறைக்கிறது, பாஸ்பரஸ் உடல் செல்களின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மெக்னீசியம் அவசியம். பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது.
- கம்புவில் உள்ள லிக்னின் எனப்படும் பைட்டோநியூட்ரியன்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், இதயத் தடுப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
- கம்பு தொடர்ந்து சாப்பிடுவது பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது. கம்புவில் உள்ள ஏராளமான கரையாத நார்ச்சத்து உணவின் இயக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் பித்த சுரப்பைக் குறைக்கிறது. இது பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். நார்ச்சத்து நிறைந்த செறிவு உணவை எளிதாக நகர்த்த உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
கம்பு தோசை செய்வது எப்படி? (How To Make Kambu Dosai)
தேவையான பொருட்கள்
- கம்பு - 1 கப்
- இட்லி அரிசி - 1 கப்
- பச்சரிசி - 1/2 கப்
- கருப்பு உளுந்து - 1/2 கப்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- வெந்தயம் - ஒரு ஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, கம்பு, பச்சரிசி சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.
- இதனை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவவும்.
- பின்னர் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்
- வேறு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 4 மணி ஊற வைக்கவும்.

- தற்போது கிரைண்டரில், உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 25 நிமிடங்களுக்கு அரைக்கவும். பின்னர் இதனை பாத்திரத்தில் மாற்றவும்.
- பின்னர் இட்லி அரிசி, கம்பு, பச்சரிசி சேர்த்து அரைக்கவும். இதனை 30 நிமிடங்களுக்கு அரைக்கவும். பின்னர் இதனை உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு சேர்த்து கலக்கவும்.
- இந்த மாவை 8 மணி நேரம் அப்படியே விடவும். மாவு புளித்த உடன் இதனை கலந்து விடவும்.
- பின்னர் தோசை கல்லை சூடுபடுத்தி, இந்த மாவை ஊற்றி, மேலே நல்லெண்ணை இட்டு, தோசை வெந்த உடன் திருப்பி போட்டு, தட்டில் எடுத்து வைக்கவும்.
- அவ்வளவு தான் ருசியான கம்பு தோசை தயார்.
Image Source: Freepik
Disclaimer
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version