சாப்பிடும் போது நிறைய தண்ணீர் குடிப்பீர்களா?

  • SHARE
  • FOLLOW
சாப்பிடும் போது நிறைய தண்ணீர் குடிப்பீர்களா?

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சில தீமைகள்:

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உணவை சரியாக மெல்லாமல் விழுங்கிவிடுவோம். இதனால் உணவு சரியாக ஜீரணிக்கப்படாமல் இருப்பது, செரிமான மண்டலத்தில் அமிலங்கள் அதிகமாகும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் வயிற்று உப்புசம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் அதிகமாகும். உணவில் உள்ள சத்துக்களை தண்ணீர் கழுவி விடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காது.

உணவின் போது சிறிய அளவு தண்ணீர் குடிப்பதால் எந்தத் தீங்கும் இல்லை என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் செரிமான செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படலாம்.

சரியான முறை:

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அல்லது பின் தண்ணீர் குடிப்பது நல்லது. சாப்பிடும் போது சிறிய அளவில் உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஒவ்வொரு உணவிற்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

சாப்பிட்டு முடித்தப்பிறகு தண்ணீர் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இருப்பினும், தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இன்னும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதனால்தான் இந்த விஷயத்தில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், உணவுடன் தண்ணீர் குடிப்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

Read Next

மக்களே! இந்த மாவை மைதாவிற்கு பதிலாக பயன்படுத்தினால்… ஆரோக்கியம் சும்மா அள்ளும்!

Disclaimer

குறிச்சொற்கள்