தாய்ப்பால் அமிர்தத்திற்கு சமமானது. ஏனெனில் குழந்தைக்கு தேவையான அத்தனை நன்மைகள் அடங்கியுள்ளன. குழந்தைக்கு முதல் முறையாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தாய்ப்பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு எந்த நோயும் வராது. எதிர்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள் புதிய ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
1.போதுமான ஊட்டச்சத்து:
ஒரு குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு வருடம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது நல்லது. இதற்கு முன், குழந்தையின் உணவில் பல்வேறு உணவுகள் சேர்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: Baby Brain Food: கருவிலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை?
முதல் ஆறு மாதங்களில் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் இருந்து முழுமையாகப் பெறப்படுகின்றன. அதேபோல் தாய்ப்பாலின் ஊட்டச்சத்து கூறுகளும் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப மாறுகின்றன.
2.குறைமாத குழந்தைகளுக்குக்கான நன்மைகள்:
சில குழந்தைகள் குறைமாதத்தில் பிறக்கின்றன. இ இப்படிப்பட்ட குழந்தைகளை தாய்ப்பால் கொடுத்து வளர்த்து வந்தால், எதிர்காலத்தில் இதயக் கோளாறுகள் வராது என்கின்றனர் நிபுணர்கள்.
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். இதனாலேயே, இந்தக் குழந்தைகள் வளரும்போது இதயக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், தாய்ப்பால் இந்த குழந்தைகளுக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சி காரணிகளின் அளவை அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
3.ஆன்டி-பாடிகள்:
தாய்ப்பாலில் ஆன்டி-பாடிகள் நிறைந்துள்ளது. அவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. முதலில் வெளிவரும் பால் கொலஸ்ட்ரம் ஆகும். இதில் இம்யூனோகுளோபுலின் ஏ (IgA) நிறைந்துள்ளது. மேலும், இதில் மற்ற ஆன்டிபாடிகள் உள்ளன.
தாயின் உடலில் வைரஸ் அல்லது பாக்டீரியா உருவாகும் போது, தாய்பாலில் ஆன்டிபாடிகள் உற்பத்தியாகின்றன. இவை குழந்தைக்கு கொடுக்கப்படுவதன் மூலமாக, மூக்கு, தொண்டை மற்றும் செரிமான அமைப்பில் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது.
4.ஆரோக்கியமான எடை:
தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியமான அளவில் எடையை பராமரிக்கிறது. குழந்தைகளின் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது.
பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும் அபாயம் 15 முதல் 30 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
தாய்மார்களுக்கான நன்மைகள்,
1.கருப்பை அளவு:
கர்ப்ப காலத்தில் கருப்பை அளவு அதிகரிக்கிறது. இது அடிவயிற்றில் உள்ள அனைத்து இடத்தையும் ஆக்கிரமிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு, கருப்பை சாதாரண அளவிற்கு திரும்ப கருப்பை ஊடுருவல் எனப்படும் செயல்முறை நடைபெறுகிறது.
2.ரத்தப்போக்கை குறைக்கும்:
கர்ப்ப காலத்தில் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளியாகும். பிரசவத்தின் போது இந்த ஹார்மோன் அதிக அளவில் வெளியிடப்பட்டு, ரத்தக் கசிவைக் குறைக்கிறது. அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும் போதும்ஆக்ஸிடாசின் வெளியிடப்படுகிறது.
எனவே, பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த போக்கை குறைக்கவும், கருப்பையை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது.
3.பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வு:
பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்குமனச்சோர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. சுமார் 15 சதவீத தாய்ப்பால் கொடுக்காதவர்களுடன் ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு.
பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள், குழந்தை பிறந்த உடனேயே, தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் குழந்தைகளுக்கு சில காலம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதால், மனச்சோர்வு அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
4. நோய் ஆபத்து:
பாலூட்டும் தாய்மார்களுக்கு புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயம் குறைவு. குறிப்பாக மார்பக புற்றுநோயின் ஆபத்து மிகவும் குறைவாக உள்ளது. அதுமட்டுமின்றி தாய்ப்பால் புகட்டுவது மகளிருக்கு இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி, டைப் 2 நீரழிவு நோய் அபாயத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைகிறது.
5.பணம், நேரம் மிச்சம்:
தாய்ப்பால் கொடுப்பதால் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. தாய்ப்பால் குழந்தைக்கு உடனடியாக கிடைக்கக்கூடியது. இது தாய்க்கும், சேய்க்குமான பிணைப்பை அதிகரிப்பதோடு, பால் பவுடர், பால் பார்முலா போன்றவற்றை வாங்க வேண்டிய நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.
மேலும் சந்தைகளில் கிடைக்கக்கூடிய பார்முலா தயாரிப்புகளை விட தாய்ப்பால் மிக, மிக அதிகமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
Image Source: Freepik