நகரங்களிலும், கிராமங்களிலும் குழந்தைகளில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சினையாகத் தோன்றியுள்ளது. சிறுவயதிலேயே அதிக உடல் எடையால், டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சுவாசக் குறைபாடுகள் என பல வாழ்க்கைமுறை நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகி வருகின்றனர். மேலும் கல்லீரல் செயலிழப்பு, மன அழுத்தம், தன்னம்பிக்கையின் குறைவு போன்ற மனநலச் சிக்கல்களும் அவர்களை வாட்டுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்குமா? என்பது தான் அந்த கேள்வி. உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, டெல்லியில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனை குழுமத்தில் பணியாற்றும் பாலூட்டல் ஆலோசகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பிரியங்கா கண்ணா அவர்களை சந்தித்தோம். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். அவர் கூறியவை இங்கே.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்குமா?
ஆம், தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் எதிர்காலத்தில் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும் என்பது பல ஆய்வுகளாலும், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யூனிசெஃப் (UNICEF) போன்ற அமைப்புகளின் பரிந்துரைகளாலும் உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் முழுமையாக தாய்ப்பாலை மட்டுமே வழங்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் ஒரு சக்திவாய்ந்த இயற்கை உணவாகும்.
தொடர்ந்து தாய்ப்பால் பெறும் குழந்தைகளுக்கு, வளர்ந்த பின்பும் சாதாரணமான உடல் நிறை குறியீடு (BMI) கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது அவர்களை உடல் பருமன், நீரிழிவு, மற்றும் இதய நோய்கள் போன்ற நீண்டகால வாழ்க்கைமுறை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
மேலும் படிக்க: தாய்மார்களே! தூங்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கணுமா? டாக்டர் தரும் டிப்ஸ் இதோ
தாய்ப்பால் குழந்தைகளை உடல் பருமனிலிருந்து எவ்வாறு பாதுகாக்கிறது?
"தாய்ப்பாலில் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடன், தாய்ப்பால் உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வழிகளையும் கொண்டுள்ளது," என்று புது தில்லி கிளவுட்னைன் மருத்துவமனை சார்ந்த பாலூட்டல் நிபுணரும் பிசியோதெரபிஸ்டுமான பிரியங்கா கண்ணா கூறுகிறார்.
பசிக்கேற்ப பால் குடிப்பது
தாய்ப்பால் அளவு மற்றும் நேரத்தை குழந்தைதான் தீர்மானிக்கிறது. இதனால் தேவைக்கு மேற்பட்ட பால் பருகுவதை குழந்தை தவிர்க்கிறது. இது அதிகப்படியான காலரி சேர்வதைத் தடுக்கும்.
ஹார்மோன் கட்டுப்பாடு
தாய்ப்பாலில் லெப்டின் மற்றும் அடிபோனெக்டின் போன்ற ஹார்மோன்கள் உள்ளன. இவை குழந்தையின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) சமனாக வைத்திருக்க உதவுகின்றன. இது கொழுப்பு சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படுவதைத் தடுக்கும்.
தவிர்க்க முடியாத தனித்துவம்
தாய்ப்பால் என்பது ஒரே மாதிரியானதல்ல; குழந்தையின் வளர்ச்சி நிலை மற்றும் தேவைகளுக்கேற்ப அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மாறிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
செரிமானத்திற்கு உகந்தது
தாய்ப்பாலில் உள்ள ப்ரீபயாடிக்குகள் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் குழந்தையின் செரிமான அமைப்பை வலுப்படுத்துகின்றன. இது குழந்தைக்கு ஆரோக்கியமான குடல் சூழலை வழங்குவதால், எதிர்காலத்தில் உடல் பருமன் மற்றும் அதன் பின்விளைவுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
தாய்பால் தடுக்கும் அபாயங்கள்
WHO இன் கருத்துப்படி, தாய்ப்பால் தூக்கக் கோளாறுகள் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளைக் குறைக்கிறது. குழந்தைக்கு மனச்சோர்வு மற்றும் சமூக பதட்டம் ஏற்படும் அபாயம் குறைவு. பிரியங்கா கன்னாவின் கூற்றுப்படி, தாய்ப்பால் குழந்தையை இந்த நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
* காது தொற்று, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றுகளின் ஆபத்து குறைகிறது.
* ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
* வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைகிறது.
* திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறியின் ஆபத்து குறைகிறது.
எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
முதல் 6 மாதங்களுக்கு தாய்மார்கள் பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று WHO மற்றும் இந்திய குழந்தை மருத்துவ அகாடமி (IAP) பரிந்துரைக்கின்றன. இதற்குப் பிறகு, குழந்தைக்கு அரை-திட உணவும் பின்னர் திட உணவும் கொடுக்கப்பட வேண்டும், மேலும் குறைந்தது 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறது.
இறுதிச் சொல்
தாய்ப்பால் என்பது ஒரு குழந்தைக்கு சிருஷ்டியின் சிறந்த பரிசு. அதில் நம்மால் உருவாக்க முடியாத அத்தனை பாதுகாப்பும், வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
தாய்ப்பால் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த தகவல்களுக்கு எங்களை சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்:
🔗 Facebook – https://www.facebook.com/share/1AzLkKmLba/
🔗 Instagram – https://www.instagram.com/onlymyhealthtamil/
தாய்ப்பால் தரும் நன்மைகளை அனைவரும் அறிந்து பயனடைய, இந்த செய்தியை பகிர்வோம்!