பொது நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் ராஜேஷ் கேஷவ்..

பிரபல மலையாள நடிகர் ராஜேஷ் கேசவ் பொது நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை நடைபெற்றும், அவ்வப்போது சில சிறிய அசைவுகளைத் தவிர, அவருக்கு இன்னும் எந்த பதிலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • SHARE
  • FOLLOW
பொது நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் ராஜேஷ் கேஷவ்..


இன்று பெண்கள், ஆண்கள் என அனைத்து வயது நபர்களும் பொது இடங்களில் மயங்கி விழுவதைக் காண முடிகிறது. ஆனால், இதை சாதாரணமாக எண்ண முடியாது. அதில் பெரும்பாலானோர் மயங்கி விழுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாரடைப்பு ஏற்படுவது அமைகிறது. அவ்வாறே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சியில் நடந்த நேரடி நிகழ்ச்சியின் போது, நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான ஆர்.கே., என்றழைக்கப்படும் ராஜேஷ் கேசவ் அவர்கள் திடீரென மயங்கி விழுந்தார். அவர் திடீர் மாரடைப்பால் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

49 வயதான அவர் ஒரு பொது நிகழ்ச்சியின் இறுதி தருணங்களில் மேடையிலேயே சரிந்து விழுந்த, பார்வையாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜேஷ் கேசவ் உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அவசர ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாகவும், பிறகு வென்டிலேட்டரை நம்பி உயிர்காக்கும் கருவியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

திரையுலகில் உள்ள பல முக்கிய நபர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவ்வாறே, நிகழ்வில் கலந்து கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் பிரதாப் ஜெயலட்சுமி, ரசிகர்களிடம் பிரார்த்தனை மற்றும் ஆதரவை கேட்டுக்கொண்டார். அவர் சமூக ஊடகங்களில் ராஜேஷ் கேஷவ் குறித்து ஒரு புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த பதிவும் உதவலாம்: ஹார்ட் அட்டேக் வராம இருக்க இந்த உணவுகளைக் கட்டாயம் உங்க டயட்ல சேர்க்காதீங்க

சமூக வலைதளங்களில் பதிவு

அதில் அவர், “எங்கள் அன்பு நண்பர் ராஜேஷ் கேஷவ் இப்போது உங்கள் பிரார்த்தனைகளைத் தேவைப்படுத்துகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முடிவில் அவர் சரிந்து விழுந்தார்.. சுமார் 15-20 நிமிடங்களுக்குள் ராஜேஷ் கொச்சி லேக் ஷோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் விழுந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்னர் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. அப்போதிருந்து, அவர் ஒரு வென்டிலேட்டரின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்” என்று பகிர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, “மேலும் அவருக்கு எந்த பதிலும் இல்லை (எப்போதாவது காணப்படும் சிறிய அசைவுகளைத் தவிர) மேலும் இந்த நிலை அவரது மூளையையும் சிறிய அளவில் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவர் மீண்டும் உயிர் பெறுவதற்குத் தேவையானது அவரது அன்புக்குரியவர்களின் பிரார்த்தனைகள் மட்டுமே என்பதை நாங்கள் உணர்கிறோம். மேடையில் நிகழ்ச்சி நடத்தி அமைதியைக் கலைப்பவர் இப்படி வென்டிலேட்டரில் படுத்துக் கொள்ள முடியாது.. நாம் அனைவரும் ஒன்றாக வந்தால், அவர் எழுந்திருப்பார்.. அவர் முன்பு போல மேடையை நிரப்புவார்... நம் நண்பருக்கு வலுவான பிரார்த்தனைகளும் அன்பும் இருக்க வேண்டும்.. இப்போது நான் வேறு எதுவும் சொல்ல முடியாது... அவர் திரும்பி வருவார்.. அவர் திரும்பி வருவார்.. அவர் திரும்பி வருவார்.. தயவுசெய்து திரும்பி வாருங்கள் என் அன்பான நண்பரே.” என்று கூறினார்.

மேலும் அவர் இந்தப் பதிவில், “ஒரு காலத்தில் ஒவ்வொரு மேடையையும் உயிரால் ஒளிரச் செய்த நம் அன்பான ராஜேஷ், இப்போது அமைதியாகக் கிடக்கிறார், ஒரு இயந்திரத்தின் உதவியுடன் மட்டுமே சுவாசிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு, கிரவுன் பிளாசாவில் ஆரவாரங்கள் மற்றும் விளக்குகளுக்கு நடுவில், விதி அவரை வீழ்த்தியது. இது ஒரு மாரடைப்பு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், அதன் பிறகு அவர் உண்மையிலேயே எங்களை நோக்கி கண்களைத் திறக்கவில்லை.

ஆனால் ராஜேஷை நாங்கள் அறிவோம் - அவர் அமைதியாக இருப்பவர் அல்ல. நம்மை சிரிக்கவும், உற்சாகப்படுத்தவும், நடனமாடவும் வைத்த அதே ஆன்மா இதுதான்; ஒரு கூட்டத்தை உயிர்ப்பித்த அதே இதயத் துடிப்பு. அவர் மருத்துவமனை படுக்கையைச் சேர்ந்தவர் அல்ல - அவர் மேடையில், நம் வாழ்வில், நம் சிரிப்பில் சேர்ந்தவர்.

அவருக்கு இப்போது தேவை மருந்து மட்டும் அல்ல, ஆனால் நம் அன்பு மற்றும் பிரார்த்தனைகளின் தடுக்க முடியாத சக்தி. நம்பிக்கையுடன் அவரை நம் இதயங்களில் வைத்திருந்தால், அவர் மீண்டும் எழுந்திருப்பார். அவர் எழுந்து நிற்க வேண்டும். ஏனென்றால் ராஜேஷைப் போன்ற ஒருவர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற முடியாது.” என்று பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வெளியானதிலிருந்து, ரசிகர்கள், சக ஊழியர்கள் மற்றும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: விளையாட்டுத் தளத்தில் விபரீதம்.! 25 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு..

Image Source: Freepik

Read Next

உங்களுக்கு தெரியாத தைராய்டின் மறைக்கப்பட்ட அறிகுறிகள்.. இத நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Disclaimer