World Cancer Day 2024: உலக புற்றுநோய் தினம் தீம், வரலாறு மற்றும் முக்கியத்துவம்

  • SHARE
  • FOLLOW
World Cancer Day 2024: உலக புற்றுநோய் தினம் தீம், வரலாறு மற்றும் முக்கியத்துவம்


World Cancer Day 2024: உலகம் முழுவதும் 70 சதவீதம் இறப்புக்கு முக்கிய காரணமாக புற்றுநோய் திகழ்கிறது. இதை முன்கூட்டியே கண்டறிவது, இதனை தடுப்பதற்கும், முறையான சிகிச்சையளிப்பதற்கும், உயிரை காப்பாற்றுவதற்கும் உதவியாக இருக்கும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

உலக புற்றுநோய் தினம் வரலாறு (World Cancer Day History)

பிப்ரவரி 4, 2000 அன்று, உலக புற்றுநோய் தினத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், புற்றுநோய்க்கு எதிரான உலக உச்சி மாநாடு பாரிஸில் நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தை அறிமுகப்படுத்துவது பாரிஸ் சாசனத்தின் முக்கிய அங்கமாகும். இது புற்றுநோய் ஆராய்ச்சி, தடுப்பு, நோயாளி பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக புற்றுநோய் தினம் உருவாக்கப்பட்டது. 

புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் (World Cancer Day Theme)

ஒவ்வொரு ஆண்டும், உலக புற்றுநோய் தினம் ஒரு சிறப்பு கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. சில கருப்பொருள்கள் பின்வருமாறு:

2022: “க்ளோஸ் தி கேர் கேப்”

இதன் முன்முயற்சியின் முதல் 12 மாதங்களுக்கு, உலகளவில் புற்றுநோய் சிகிச்சையின் சவால்களைப் புரிந்துகொள்வது மற்றும் அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க உணவும் உதவலாம்.!

2023: “எங்கள் குரல்களை ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கும்”

வலிமையான முறையீடு செய்ய ஒத்த எண்ணம் கொண்டவர்களின் குரல்களை ஒன்றிணைக்க வலுவான கூட்டணிகள் மற்றும் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

2024: “ஒன்றாக, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சவால்”

புற்றுநோய்க்கு முன்னுரிமை அளிப்பது, சமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான உத்திகளை உருவாக்குவது, நியாயமான மற்றும் புற்றுநோயற்ற உலகத்தை உருவாக்க வளங்களை ஒதுக்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கவனத்தை ஈர்ப்பதை வலியுறுத்துகிறது.

உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம் (World Cancer Day Significance)

புற்றுநோய் என்பது உடலில் உள்ள சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ச்சியடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் நிலை. உலகளாவிய ரீதியில், 2020 ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இறப்புகளுக்குக் புற்றுநோய் காரணமாக திகழ்கிறது.

இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில் 19 முதல் 20 லட்சம் புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. புகையிலை பயன்பாடு, நீண்ட காலமாக மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை மற்றும் காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஆகியவை புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் நோயறிதலில் தாமதம் ஏற்படுகிறது. புற்றுநோய் பரிசோதனை, தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய பொது விழிப்புணர்வு இந்திய மற்றும் உலக மக்களிடையே குறைவாகவே உள்ளது. உலக புற்றுநோய் தினம் புற்றுநோயைத் தடுப்பது, அதை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சையளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கவனத்தில் கொள்கிறது.

Image Source: Freepik

Read Next

World Cancer Day 2024: புற்றுநோயில் இத்தனை வகை இருக்கா? இந்த அறிகுறிகள் எல்லாம் லேசுல விட்ராதீங்க

Disclaimer

குறிச்சொற்கள்