மழைக்காலத்தில் பேரிக்காய் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? எப்போது சாப்பிடுவது நல்லது

Why you should eat pears during the monsoon season: மழைக்காலத்தில் பேரிக்காய் உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உடல் எடை இழப்புக்கும் உதவுகிறது. இதில் மழைக்காலத்தில் பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மழைக்காலத்தில் பேரிக்காய் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? எப்போது சாப்பிடுவது நல்லது


Top reasons to add pears to your monsoon diet: மழைக்காலம், கோடைக்கால வெப்பத்திற்கு இதமான உணர்வைத் தந்தாலும் பல்வேறு தொற்றுக்கள் மற்றும் நோய்களை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், மக்கள் தங்கள் அன்றாட உணவில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். மழைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, தங்கள் உணவுகளில் சில பழங்களைச் சேர்க்கலாம். அவ்வாறு இந்த காலகட்டத்தில் சேர்க்கக்கூடிய முக்கிய பருவகால பழங்களில் ஒன்றாக பேரிக்காய் அமைகிறது. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பேரிக்காய் சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின்-கே, வைட்டமின்-சி, தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளது. மேலும் இதில் குறைந்தளவிலான கலோரிகள் உள்ளது. இந்நிலையில் மழைக்காலத்தில் பேரிக்காய் சாப்பிடுவது பல பருவகால நோய்களைத் தடுக்க உதவுகிறது.

இது தவிர, உடல் எடையைக் குறைக்கவும், செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைப் போக்கவும் பேரிக்காய் உதவுகின்றன. இதில் மழைக்காலத்தில் பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டயட்ஃபிட்டின் உணவியல் நிபுணர் அபர்ணா மேத்யூனன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Fruit For Constipation: பேரிக்காயை இப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை எளிதில் குணமாகும்!

மழைக்காலத்தில் பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடையைக் குறைப்பதற்கு

பேரிக்காய் நார்ச்சத்து நிறைந்ததாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதாகும். இந்த நார்ச்சத்துக்கள், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது. இதனால், ஒருவருக்கு விரைவாக பசி எடுக்காது. இந்நிலையில் வேறு சில ஆரோக்கியமற்ற சிற்றுண்டி உட்கொள்ளலைத் தடுக்கலாம். இதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.

செரிமானத்தை மேம்படுத்த

மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் வயிற்று அசௌகரியத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க பேரிக்காய்களைத் தங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம்.

இது தவிர, பேரிக்காய்களில் உள்ள நல்ல அளவிலான நார்ச்சத்துக்கள், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

பேரிக்காய்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்நிலையில் பேரிக்காய் உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இதை உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் பேரிக்காய் சாப்பிடுவது நல்லதா.?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு

நோய்த்தொற்றுக்கள் அதிகம் ஏற்படும் மழைக்காலத்தில், நோய்களைத் தவிர்க்க உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது அவசியமாகும். இந்நிலையில், மழைக்காலத்தில் பேரிக்காய் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

பேரிக்காயில் ஏராளமான வைட்டமின்-சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலை பல வகையான தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க

மழைக்காலத்தில், பலரும் வீக்கம் மற்றும் வலி பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், பேரிக்காய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் பேரிக்காயில் நல்ல அளவு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இவை உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவுகின்றன.

பேரிக்காய் சாப்பிட சரியான நேரம் எது?

பேரிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். எனினும், காலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இதன் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இருப்பினும், எந்தவொரு மருத்துவ நிலை ஏற்பட்டாலும், மருத்துவரின் ஆலோசனையுடன் இதை உட்கொள்வது நல்லது.

முடிவுரை

பேரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மழைக்காலங்களில் இதை உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடையைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. வேறு ஏதேனும் மருத்துவ நிலை அல்லது கடுமையான நோய் ஏற்பட்டால், இதை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Pears: மலச்சிக்கல் முதல் எடை குறைப்பு வரை பல நன்மைகளை வழங்கும் பேரிக்காய்... எப்படி சாப்பிடணும்?

Image Source: Freepik

Read Next

Fish Head Benefits: உங்களுக்கு மீன் தலை சாப்பிடப் பிடிக்குமா? உண்மையில் இது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Disclaimer