What Spices Should Be Avoid During Summer: கோடைக்காலம் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். இதில் உடலில் நீரிழப்பு உண்டாவதும் அடங்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதுடன் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த காலநிலையில் மசாலாக்கள் இல்லாத உணவை எடுத்துக் கொள்வது முழுமையடையாமல் இருக்காது.
அந்த வகையில் கொத்தமல்லி, புதினா, மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற பல மசாலா பொருள்கள் உடலுக்குக் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் சூட்டைத் தணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், சில மசாலா வகைகள் உடல் வெப்பத்தை அதிகரித்து பல்வேறு நோய்களை உண்டாக்கலாம். எனவே இந்த வகை மசாலா பொருள்களை மிதமாக பயன்படுத்துவது நல்லது.
கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருள்கள்
இதில் கோடைக்காலத்தில் மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய மசாலா பொருள்களைக் காணலாம்.
மிளகாய்
இந்திய உணவில் மிளகாய் சேர்க்காமல் எந்த உணவும் முழுமை அடையாது. இதில் பச்சை மிளகாய், மெல்லிய, நீளமான, சிவப்பு மற்றும் கருமிளகு போன்ற அனைத்து மிளகாய் வகைகளும் அடங்கும். ஆனால், கோடைக்காலத்தில் மிளகாய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதிலுள்ள கேப்சைசின் உடலில் எரிச்சலை உண்டாக்கலாம்.
கிராம்பு
கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கோடைக்காலத்தில் எபிஸ்டாக்சிஸ், ஹேமோர்ஹாய்ட்ஸ், மெனோராஜியா போன்ற இரத்தக்கசிவு பிரச்சனை உள்ளவர்கள் கிராம்பைத் தவிர்க்க வேண்டும்.
பெருங்காயம்
இது உணவு வகைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப்பொருளாகும். உணவில் ஒரு சிட்டிகை அளவிலான பெருங்காயம் சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதுடன், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. ரத்தத்தில் வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் கோடைக்காலத்தில் மிகவும் கவனமாக உட்கொள்ள வேண்டும்.
பூண்டு
உணவில் பூண்டு சிறிதளவு சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதுடன், பல்வேறு முக்கிய ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. குளிர்காலத்தில் பூண்டு எடுத்துக் கொள்வதன் நுகர்வு அதிகம். ஆனால் கோடைக்காலம் என்று வரும் போது பூண்டை உட்கொள்வது உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம். எனவே மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இரத்தக்கசிவு, துர்நாற்றம் மற்றும் அமிலப் பாய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகும்.
இஞ்சி
இஞ்சி உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மேலும் இதில் தாமிரம், மாங்கனீசு, வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆனால், இஞ்சியை அதிகம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில் இது கோடைக்காலத்தில் உடலை சூடாக்கலாம்.
இந்த வகை மசாலாப் பொருள்களை கோடைக்காலத்தில் உட்கொள்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்:
Image Source: Freepik