
$
Kesar Water Benefits: கர்ப்ப காலத்தில் குங்குமப் பூ தண்ணீர் சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்ற பேச்சு நீண்ட காலமாக இருக்கிறது. கர்ப்பக் காலத்தில் குங்குமப் பூ எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக குங்குமப் பூ தண்ணீர் குடித்தால். கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ நீரைக் குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.
முக்கியமான குறிப்புகள்:-
கர்ப்பிணி பெண்களுக்கு குங்கமப்பூவில் கிடைக்கும் நன்மைகள்
குங்குமப்பூ உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குங்குமப்பூ உதவியுடன் உடலின் பல பிரச்சனைகளை நீக்குகிறது. இது ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ நீரை உட்கொள்வது கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஃபோலிக் அமிலம், கால்சியம், செலினியம், துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின்-ஏ, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் குங்குமப்பூ நீரில் காணப்படுகின்றன. குங்குமப்பூ நீரை உட்கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் தோல் தொற்று போன்ற பருவகால நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதையும் படிங்க: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
குங்குமப் பூ நீர் செய்வது எப்படி?
குங்குமப்பூ நீர் செய்யும் முறை மிகவும் எளிதானது. குங்குமப்பூவை வெந்நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை உட்கொள்ளுங்கள். குங்குமப்பூவில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. குங்குமப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீரை உட்கொள்வது உடலின் செல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தவிர்க்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் உடலின் ஏணைய ஆரோக்கியங்கள் பாதுகாக்கப்படுகிறது.
இரத்த சோகை தடுக்கப்படும்
கர்ப்ப காலத்தில், சில பெண்களுக்கு இரத்த சோகை என்ற நோய் வரும். இரத்தம் குறைவு போன்ற பிரச்சனையால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பத்தின் போது பலவீனமாக உணருவீர்கள். இரத்த சோகை நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பை குறைக்கும். த்தகைய சூழ்நிலையில், பல வகையான பிரச்சினைகள் நடக்கத் தொடங்குகின்றன. இதைத் தவிர்க்க, பெண்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை குங்குமப்பூ பால் அல்லது குங்குமப்பூ நீர் உட்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
குங்குமப்பூவில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இதனை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குங்குமப்பூ நீரை உட்கொள்வதன் மூலம் உடலின் சக்தியும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவீனமாக உணருவார்கள். இதை போக்க குங்கமப்பூ நீரைக் குடிக்கலாம். கர்ப்பக் காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 5 கிராமுக்கு மேல் குங்குமப்பூவை பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கமின்மை பிரச்சனை தீரும்
கர்ப்பம் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால் தூக்கத்தில் சிக்கல் வரும். தூக்கமின்மை காரணமாக கர்ப்ப காலத்தில் எரிச்சல் உணர்வு ஏற்படும். இந்த பிரச்சனையை போக்க குங்கமப்பூவை மாலை நேரத்தில் பருகலாம். குங்குமப்பூவில் குரோசெடின் உள்ளது. இது ஆழ்ந்த உறக்கத்தை பெற வழிவகுக்கும்.
மன அழுத்தம் குறையும்
கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்கள் உடல்நலம், குழந்தை மற்றும் பிரசவம் குறித்து கவலைப்படுகிறார்கள். இதன்காரணமாக பலமுறை மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பிபி அதிகரிக்கும். ர்ப்ப காலத்தில் பிபியைக் கட்டுப்படுத்த, மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ நீரைக் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். குங்குமப்பூவை உட்கொள்வது நினைவாற்றலை அதிகரிக்க நன்மை பயக்கும். கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை உட்கொள்வது கருவின் மூளை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.
செரிமானம் மேம்படும்
பல பெண்கள் கர்ப்ப காலத்தில் மோசமான செரிமானம் இருப்பது போல் உணருகிறார்கள். குங்கமப்பூ உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதற்கு நன்மை பயக்கும். குங்கமப் பூ உட்கொள்வதால் அஜீரணம், வாயு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் குடல் அழற்சி போன்ற பிரச்சனைகள் நீங்குகின்றன.
இதையும் படிங்க: கருச்சிதைவு ஏற்படுவதை எப்படி தடுப்பது? எதனால் ஏற்படுகிறது? மருத்துவரின் 5 ஆலோசனைகளை கேளுங்கள்!!
குங்கமப்பூவில் இதுபோன்ற ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்றாலும் நீங்கள் ஏதேனும் தீவிரத்தை உணரும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பொதுவாக கர்ப்பக் காலம் என்பது மிக முக்கியமான காலமாகும். இந்த காலக்கட்டத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் மருத்துவரை அணுகி எடுப்பது நல்லது.
image source: freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version