இந்தியாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வலி நிவாரணிகளுக்கு பதிலாக பாராசிட்டமால் பயன்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நோயாளிக்கு அதிக காய்ச்சல், உடல்வலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்போது பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளலாம்.
இருப்பினும், நீண்ட காலமாக பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால், இந்த மருந்து உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மற்ற மருந்துகளைப் போலவே, பாராசிட்டமால் உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பல ஆய்வுகள் பாராசிட்டமால் மாத்திரைகள் சமச்சீரான பயன்பாட்டினால் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன.
இந்த மாத்திரைகளின் டோஸ் அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்கின்றனர் நிபுணர்கள். சிலருக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இதையும் படிங்க: Pneumonia: நிமோனியாவை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?
பாராசிட்டமால் மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என மருர்ஹ்ர்ஹுவர்கள் எச்சரிக்கின்றனர். கண்களின் நிறம்பச்சையாக மாறுதல் மற்றும் தோல், சிறுநீரின் நிறம் மாறுதல், வயிற்றில் வலி போன்றவை கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும்.
இந்த மாத்திரைகளின் அளவு அதிகரித்தால் இரத்தக் கசிவு ஏற்படலாம் என்றும், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளுடன் பராசிட்டமால் எடுத்துக் கொள்வதும் இந்த ஆபத்தை அதிகரிக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மற்றவற்றில், பாராசிட்டமால் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதால் உடலில் தடிப்புகள் ஏற்படுகின்றன.
மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். பாராசிட்டமால் மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால் ரத்தசோகை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் பாராசிட்டமால் உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர்.
பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பொதுவான விளைவுகள்:
- பாராசிட்டமால் உட்கொள்வதால் தூக்கம், சோர்வு, சொறி மற்றும் அரிப்பு ஆகியவை அடங்கும்.
- மூச்சு திணறல்
- விரல்கள், உதடுகள் நீலநிறமாக மாறுதல்
- இரத்த சோகை (குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை)
- கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு
- உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏறபடலாம்.
- அளவுக்கதிகமான வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் கோமாவுக்கு வழிவகுக்கும்.
எனவே, பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது மருத்துவரின் தெளிவான அறிவுறுத்தல்களை பெற வேண்டியது அவசியமாகும்.
Image Source: Freepik