Morning Habits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை காலையில் செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Morning Habits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை காலையில் செய்யுங்க!

இந்த பதிவும் உதவலாம்: ஜப்பானியர்களைப் போல ஹெல்த்தியா இருக்க தொடர்ந்து 28 நாள்கள் இத ஃபாலோ பண்ணுங்க!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை செய்ய வேண்டிய பழக்க வழக்கங்கள்

தியானம் செய்வது

மைன்ட்ஃபுல் தியானம் என்பது உடல் மற்றும் மனம் ஒரு நிலைப்படுத்துவதை உள்ளடக்கியதாகும். இது தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவதை உள்ளடக்கிய ஒரு பயிற்சியாகும். இவை பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தியானம் செய்வது மேம்பட்ட நினைவகம், கற்றல் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு போன்றவற்றுடன் தொடர்புடையதாகும். எனவே தினமும் காலையில் வெறும் 10-15 நிமிட தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவை மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்கவும், நீண்ட கால மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அமைகிறது.

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது

காலையில் உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது ஆற்றல் அளவை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். காலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது நாள் முழுவதும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் உடலில் என்டோர்பின்கள் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இவை முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துகிறது. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது நீண்ட நாள் ஆயுளை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு

பொதுவாக காலை உணவை மிகவும் ஆரோக்கியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். ஊட்டச்சத்து மிகுந்த ஒரு சமச்சீரான காலை உணவு சரியான நாளைத் தொடங்குவதற்குத் தேவையான ஆற்றலையும், அத்தியாவசிய வைட்டமின்களையும் வழங்குகிறது. ஆய்வு ஒன்றில் சத்தான காலை உணவை உட்கொள்வது இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையதாகும். மேலும் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஓட்ஸ், கொட்டைகள், பழங்கள் மற்றும் முட்டை போன்ற உணவுகளை உட்கொள்வது உடல் மற்றும் மூளைத் திறனை மேம்படுத்துவதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Waking Up Early Benefits: அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன? தெரிஞ்சிக்கோங்க!

எலுமிச்சையுடன் வெதுவெதுப்பான நீர் அருந்துவது

ஓரிரவு ஓய்வுக்குப் பிறகு நீரேற்றம் மிகவும் முக்கியமானதாகும். எனவே காலையில் அன்றாட பழக்க வழக்கங்களில் ஒன்றாக வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சேர்த்து உட்கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதற்கு எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி சத்துக்களே காரணமாகும். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. காலையில் சூடான நீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. காலை எழுந்த உடன் எலுமிச்சையை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கொழுப்பைக் குறைக்கவும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுகிறது எனக் கூறப்படுகிறது. இந்த பழக்கங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கிய பங்களிக்கிறது.

நன்றியுணர்வை வழங்குவது

நன்றியுணர்வு ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காலையில் நன்றியுணர்வு உணர்வை வளர்ப்பது மன ஆரோக்கியத்துடன் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதாக அமைகிறது. ஒருவர் நன்றியுணர்வைத் தொடர்ந்து கடைபிடிப்பது அவர்களின் மகிழ்ச்சியின் அளவு அதிகரிப்பதற்கும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. எனவே நாளைத் தொடங்கும் முன் நன்றியுள்ள சில விஷயங்களைப் பற்றி சிந்தித்து நாளைத் தொடங்குவது நல்லது. இது ஒருவரின் மனநிலையை நேர்மறையாக மாற்றுகிறது. மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நீண்ட மற்றும் ஆரோக்கியமான ஆயுளுக்கு பங்களிக்கிறது.

காலையில் செய்யக்கூடிய இந்த பழக்க வழக்கங்களின் உதவியுடன் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இவை அனைத்துமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Life: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலையில் எழுந்தவுடன் இதை செய்யுங்கள்!

Image Source: Freepik

Read Next

Oil Bath: உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா? கெட்டதா?

Disclaimer

குறிச்சொற்கள்