Signs And Symptoms Of Cardiac Arrest: ஒருவருக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. மாரடைப்பு என்பது இதயம் திடீரென துடிப்பது நிறுத்தி, உடலில் இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் போது நிகழ்வதாகும். இதய மரணம் (SCD) என்பது ஒருவரின் இதயம் அவரது உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் இரத்தத்தை நிறுத்தும் போது ஏற்படுவதாகும். இந்த இதயத் தடுப்பை முன்கூட்டியே அடையாளம் காண முடியும். எனவே, இந்த மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் பெரிய ஆபத்தைத் தடுக்கலாம்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மாரடைப்பிற்கான அறிகுறிகள்
மாரடைப்பு ஏற்படுவதற்கான சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
ஒழுங்கற்ற சுவாசம்
இதயம் பம்ப் செய்தாலும், நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜன் சரியாக கிடைக்காமல் போனால் வழக்கமாக செயல்படுவது போல செயல்பட முடியாது. இந்த சீர்குலைவை சந்திக்க நேரிடும் முதல் அரிகுறியில் சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இது ஒழுங்கற்றதாகவோ அல்லது ஆழமற்றதாகவோ இருப்பின், உடனடியாக மருத்து ஆலோசனைப் பெறுவது நல்லது. இந்த நிலையில் மூளை வழக்கத்தை விட குறைவான ஆக்ஸிஜனைப் பெறுகிறது என்பதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகள்
உடல்நிலை சரியில்லாமல் போவது
இதயம் உடலுக்கு தேவையான இரத்தத்தை பம்ப் செய்யாமல் இருக்கும் போது, உடல் அசௌகரியமாக காணப்படும். இது ஒருவர் சரியாக செயல்படவில்லை என்பதை உணர்த்தக்கூடியதாக அமையும். இந்த கட்டத்தில் முடிந்த வரை சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், முகம் சிவந்து போவது, கை மற்றும் கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகளை உணர்வர்.
இந்த நேரத்தில் மரணத்தை சந்திப்பது போல உணர்வர். என்வே இந்த கால கட்டத்தில் அமைதியாக இருக்கலாம் அல்லது ஆழ்ந்த சுவாசத்தில் கவனம் செலுத்தலாம். மரணத்தைச் சந்திப்பது போல் உணர்ந்தால் உமிழ்நீரை விழுங்குவதைத் தடுக்க கண்களை மூடிக் கொண்டு உதடுகளை ஒன்றாக அழுத்திக் கொள்ளலாம்.
கை கால்களில் கூச்ச உணர்வு
இதயம் செயல்படுவதை நிறுத்தும் போது, மூளை சிக்கல்களை அனுப்பத் தொடங்குகிறது. இதன் விளைவாகவே கூச்ச உணர்வு அல்லது மூட்டுகள் உணர்வின்மை ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்!
இதயத்துடிப்பு நின்று விடுதல்
இதயத் துடிப்பு இல்லாதது அல்லது சீர்குலைவு என்பது, ஒழுங்கற்ற அல்லது கந்தலான இதயத்துடிப்பைக் குறிக்கும் பொதுவான அறிகுறியாகும்.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது, இதயத் தசை சுருங்கும் திறனை இழக்கிறது. இந்த நேரத்தில் இரத்தத்தை பம்ப் செய்ய எந்த சக்தியும் இருக்காது. மேலும், மூளை இதயத்திலிருந்து சமிக்ஞை பெறவில்லை பெறவில்லை எனில் இது ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கலாம். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படலாம்.
கார்டியாக் அரெஸ்டின் மற்ற சில அறிகுறிகள்
மேலே கூறப்பட்ட அறிகுறிகளைத் தவிர, வேறு சில அறிகுறிகளும் மாரடைப்பு நோயாளிகளால் உணரப்படுகிறது. இப்போது கார்டியாக் அரெஸ்டின் மற்ர சில அறிகுறிகளைக் காணலாம்.
- மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைக் குறிக்கும் வகையில் மார்பு வலி அல்லது தாடையில் வலி ஏற்படுதல்
- மயக்கம் அல்லது குமட்டல் உணர்வு
- தோல் மிக அதிக வெளிர் நிறமாகுதல்
- அதிக தலைவலி ஏற்படுவது
இந்த வகையான அறிகுறிகளை உணரும் போது, உடனடியாக சுவாசம் அல்லது அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகள் அனைத்தும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்
Image Source: Freepik