Monsoon Sickness: மழைக்கால தொற்றிலிருந்து எஸ்கேப் ஆக… இதை மட்டும் செய்தால் போதும்!

  • SHARE
  • FOLLOW
Monsoon Sickness: மழைக்கால தொற்றிலிருந்து எஸ்கேப் ஆக… இதை மட்டும் செய்தால் போதும்!


நீங்கள் மழையில் வெளியே சென்றிருந்தால், இந்த பருவ கால நோய்களில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..,

these-diseases-and-infections-are-common-in-rainy-season

இதையும் படிங்க: Monsoon Health Tips: பெற்றோர்களே உஷார்; மழைக்கால தொற்றுகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!

தமிழ்நாட்டில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக கனமழை காரணமாக அங்காங்கே தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய்களை பரப்பி வருகிறது. மழைக் காலங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நீரினால் பரவும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அசுத்தமான தண்ணீரின் மூலம் பல நோய்கள் மனிதர்களுக்கு பரவும். பல நாட்களாக தேங்கி நிற்கும் தண்ணீர் பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் பூஞ்சைகளின் இனப்பெருக்க இடமாக மாறி வருகிறது.

நீர் மூலம் பரவும் நோய்கள்:

காலரா - காலரா ஒரு பொதுவான நீர் மூலம் பரவும் நோய். இது வயிற்றுப்போக்கு, நீரிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இதை தவிர்க்க சுத்தமான தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஹெபடைடிஸ் ஏ - அசுத்தமான தண்ணீரால் ஏற்படும் ஹெபடைடிஸ் கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இது மஞ்சள் காமாலை, காய்ச்சல், குமட்டல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

டைபாய்டு - அசுத்தமான நீர் அல்லது உணவு டைபாய்டு ஏற்படலாம். டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களும் இந்த பருவத்தில் பொதுவானவை.

இதையும் படிங்க: Monsoon Diseases: மக்களே அலட்சிப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து; இந்த மழைக்கால நோய்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

  • குழாய் நீரை தவிர்க்கவும்: பொது இடங்களில் குழாய் நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • கைகளை சுத்தமாக வைத்திருங்கள்: உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன்பும், வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பின்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவவும்: பலர் சாலையோர வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குகிறார்கள். எனவே, அவை மழைநீரில் ஈரமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்கு கழுவுவது முக்கியம்.
  • சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்: வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருங்கள். கொசுக்கள் பல நாட்கள் தேங்கி நிற்கும் நீரில் வளரும், எனவே உங்கள் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கவும்.
  • ஆடைகளில் கவனமாக இருங்கள்: பூச்சிகள் மற்றும் கொசுக்கள் கடிக்காமல் இருக்க உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள். மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை தவிர்க்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். நீங்கள் மழையில் வெளியே சென்றிருந்தால், வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் கைகளையும் கால்களையும் கழுவுங்கள்.

Image Source: Freepik

Read Next

Monsoon Diseases: மக்களே அலட்சிப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து; இந்த மழைக்கால நோய்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்