Diabetes Tips: சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்

  • SHARE
  • FOLLOW
Diabetes Tips: சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்

மழைக்காலத்தின் சர்க்கரை நோய் பாதுகாப்பு நடவடிக்கை

மழைக்காலம் மிகவும் அழகாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெளிப்புற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுங்கள், சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுங்கள்.

இதையும் படிங்க: இரவில் ஏற்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!

சுகாதாரம் முக்கியம்

கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்வது அதிகரித்து வருகிறது. சாலை எங்கும் மழை நீர் தேங்கத் தொடங்குகிறது. மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலும், தோல் நோய்கள் போன்ற வியாதிகளும் அதிகரிக்கத் தொடங்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதுபோன்ற விஷயங்களில் இருந்து கவனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.

கால்களை கவனமாக பாதுகாப்பது அவசியம்

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் கால்களை கவனமாக பாதுகாப்பது மிக நல்லது. ஒரு சிறிய வெட்டு காயம் கூட பெரிய அளவு தீங்கை சந்திக்க நேரும். உயர் இரத்த சர்க்கரை இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக, உங்கள் பாதத்தில் உள்ள நரம்புகள் சேதமடைகின்றன. இந்த நிலை நியூரோபதி என்று அழைக்கப்படுகிறது.

கண்களை அடிக்கடி தொடக் கூடாது

பருவமழை காலம் நோய்த்தொற்றுக்கான பருவமாகும். இந்த காலக்கட்டத்தில் கண் காய்ச்சல் (மெட்ராஸ் ஐ) முதல் பல்வேறு வகையான நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கண் தொற்றுகளைத் தவிர்க்க, உங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் மற்றும் உங்கள் கண்களை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும்.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், உணவு பராமரிப்பை கவனமாக பின்பற்றுவது அவசியம். பருவக் காலத்திற்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்றுக்கு எப்போதும் ஆளாகி விடக்கூடாது. வெயில் காலத்தில் எடுக்க வேண்டிய உணவுகள், மழை காலத்தில் எடுக்க வேண்டிய உணவுகள் எவை என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். வீட்டில் சுத்தமாக சமைத்த உணவை மட்டும் சாப்பிடுங்கள். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் சத்தான உணவுகளை உண்ணுங்கள்.

உடல் நீரேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்

மழைக்காலத்தில் தாகம் அதிகமாக இல்லாவிட்டாலும், உங்கள் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். பருவமழை, வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய எந்த காலத்திலும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். எனவே சர்க்கரை நோயாளிகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேங்காய் நீரையும் அளவோடு அருந்தலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

மழைக்காலத்தில் நம் செயல்பாடுகள் குறையும். அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்கள் உடல்நல பிரச்சனையை மோசமாக்கும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் போதுமான ஓய்வை எடுக்க வேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் அறிந்து செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்

இவை அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றாலும் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்ல முடிவாகும்.

image source: freepik

Read Next

Diabetes Diet: 'நாவடக்கம் முக்கியம்' சர்க்கரை நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது!

Disclaimer

குறிச்சொற்கள்