
அன்றாட வாழ்வில் தூக்கம் மிகவும் இன்றியமையாததாக க் கருதப்படுகிறது. ஏனெனில், நல்ல தூக்கம் மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் மிகுந்த நன்மை பயக்கும். ஒரு நல்ல இரவுத் தூக்கம் ஆற்றலை அதிகரித்து, உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. அதே சமயம், தூக்கமின்மை உடலைச் சோர்வாகவும் மந்தமாகவும் உணர வைக்கக்கூடும். ஆனால், தூக்கமின்மையால் சிலர் உணவுமுறைகளையும் மாற்றுகின்றனர். ஆம். சிலர் தூக்கமின்மை காரணமாக உணவு உட்கொள்ள மறுக்கின்றனர். உண்மையில், இரவில் குறைந்த தூக்கம் அல்லது தூக்கமின்மையை மேற்கொள்பவர்கள் கட்டாயம் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமான குறிப்புகள்:-
அவ்வாறு, தூக்கமின்மை அல்லது குறைந்த தூக்கத்தைக் கையாள்பவர்களுக்கு காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நிபுணரின் கருத்து
ஊட்டச்சத்து நிபுணர் பத்ரா தனது பதிவில் கூறியதாவது, “சரியான காலை நேரப் பழக்கவழக்கங்களும் உணவுகளும் மட்டுமே தூக்கமின்மையின் விளைவுகளைச் சமாளிக்க உதவும் என்று கூறுகிறார். மேலும், “நேற்று இரவு சரியாகத் தூங்கவில்லையா? அவ்வாறெனில், உங்கள் காலை உணவிற்குச் சற்று கூடுதல் கவனம் தேவை. ஏனெனில், மோசமான தூக்கம் உங்களை மந்தமாக்குவது மட்டுமல்லாமல், அடுத்த நாள் உடல் உணவைக் கையாளும் விதத்தையும் மாற்றுகிறது” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவின் தலைப்பில் எழுதியுள்ளார்.
மோசமான தூக்கத்தின் போது அடுத்த நாள் உடல் உணவைக் கையாளும் விதத்தை மாற்றுவது எப்படி
இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் குறைவது
தூக்கக் கோளாறு பொதுவாக அதிக இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த அதிக அளவு இன்சுலின் ஆனது ஒரு உணவைச் செரிமானம் செய்ய முயற்சிக்கும்போது அல்லது அதிக இன்சுலின் அளவுகளுக்கு ஏற்ப அந்த நபர் போதுமான அளவு சாப்பிடாதபோது, உடலில் இரத்த சர்க்கரை மிக விரைவாகக் குறைந்து இயல்பான அளவை விடக் கீழே சென்றுவிடுகிறது. இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் குறைகிறது.
மேலும் அவர்,“உங்கள் உடல் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறது. அதனால் நீங்கள் அந்த 'காலை நேர மந்தநிலையை' உணர்கிறீர்கள்” என்று கூறினார்.
doctor-shares-5-things-you-should-never-do-with-your-breakfast-Main
கார்டிசோல் அளவு அதிகரிப்பு
மோசமான தூக்கத்தினால் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கலாம். இது உங்கள் உடல் உணவைக் கையாளும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் சீர்குலைவு வளர்சிதை மாற்ற மாற்றங்கள், அதிகரித்த பசி மற்றும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளின் மீதான விருப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: காலை உணவைத் தவிர்ப்பவர்களா நீங்க? இது உங்களுக்குத் தான்.. நிபுணர் தரும் அட்வைஸ்
மூளை மந்தநிலை ஏற்படுவது
தூக்கமின்மை உங்கள் மனநிலையை பாதிப்பது மட்டுமல்லாமல், முடிவெடுக்கும் திறன்களையும் மந்தமாக்குகிறது. இதன் காரணமாக, கவனக்குறைவு, ஒரு கப் காபியுடன் க்ரோசான்ஸ் சாப்பிடுவது போன்ற தவறான உணவு முடிவுகளை எடுக்க நேரிடலாம். மேலும், இது சோர்வின் சுழற்சியை உருவாக்குகிறது.
பசி ஹார்மோன்கள் சீர்குலைவு
ஓய்வற்ற இரவுக்குப் பிறகு, பசி ஹார்மோன்கள் முற்றிலும் சமநிலையற்றதாகி விடலாம். மேலும், மூளைக்கு வயிறு நிறைந்திருப்பதைப் பற்றி சமிக்ஞை செய்யும் லெப்டின் என்ற ஹார்மோன் குறைவாக இருப்பதும், பசியை சமிக்ஞை செய்யும் கிரெலின் என்ற ஹார்மோன் அதிகமாக இருப்பதும் அதிக பசியையும், தேவையற்ற நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர் எடுத்துரைக்கிறார்.
ஓய்வற்ற இரவுக்குப் பிறகு உடலை எப்படி மீட்டெடுப்பது?
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, சரியான உணவு மற்றும் வழக்கத்தின் மூலம் அடுத்த நாள் காலையில் உடலை மீட்டெடுக்க முடியும். இதில் சோர்வு, எரிச்சல் மற்றும் அதிகப்படியான உணவு ஆசைகள் இல்லாமல் உடலை மீட்டெடுப்பதற்கான ஒரு எளிய வழி இங்கே பகிர்ந்துள்ளார்.
உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது
நச்சுக்களை வெளியேற்றவும், சரியான செரிமானத்திற்கு ஆதரவளிக்கவும் உகந்த அளவு தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை ஊட்டச்சத்து நிபுணர் வலியுறுத்துகிறார். இதில் அவர், "நீங்கள் எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றார்.
காலை உணவில் போதுமான புரதத்தைச் சேர்ப்பது
இது குறித்து நிபுணர் கூறியதாவது,"எனவே, பனீர் நிரப்பப்பட்ட ஒரு பருப்பு சீலா சிறந்ததாக இருக்கும்" என்று கூறினார். புரதம் நிறைந்த உணவு இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தவும், தேவையற்ற உணவு ஆசைகளைத் தடுக்கவும் உதவும்.
காலை வழக்கத்தில் குங்குமப்பூவைச் சேர்ப்பது
குங்குமப்பூ அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கும், மனநிலையை மேம்படுத்துவதற்கும் பெயர் பெற்றதாகும். எனவே, இந்த மூலப்பொருளின் நன்மை பயக்கும் பண்புகள் நிறைந்த ஒரு கலவையை உட்கொள்வது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் செரிமானத்திற்கு ஆதரவளிக்கவும் உதவுகிறது. "நீங்கள் ஐந்து முதல் ஆறு குங்குமப்பூ இழைகளை எடுத்து, அதை தேநீரில் ஊறவைத்து, வெதுவெதுப்பாக குடிக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
இந்த மூன்று எளிய நுட்பங்களும், ஓய்வற்ற தூக்கத்திற்குப் பிறகும் கூட, செரிமானத்தை எளிதாக்கவும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: காலை உணவை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது? எப்படி சாப்பிடணும், எந்த உணவை சாப்பிடணும்?
Image Source: Freepik
Read Next
நல்ல ஆரோக்கியத்துக்கு நீங்க தினமும் உங்க டயட்ல சேர்க்க வேண்டிய காய்கறிகளும், அதன் நன்மைகளும்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 15, 2025 20:23 IST
Published By : கௌதமி சுப்ரமணி

