மூன்றே நாளில் மரணத்தை ஏற்படுத்தும் வைரஸ்! சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

  • SHARE
  • FOLLOW
மூன்றே நாளில் மரணத்தை ஏற்படுத்தும் வைரஸ்! சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு


சீன விஞ்ஞானிகள் மூன்றே நாட்களில் மரணத்தை ஏற்படுத்தும் புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு ஹெபெய் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு செயற்கை வைரஸைப் பயன்படுத்தி கொடிய எபோலா வைரஸ் ஒன்று உருவகப்படுத்தப்பட்டது. இந்த சோதனைகளின் சாத்தியமான நன்மைகளையும், அபாயங்களையும் இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. மேலும், இது நேரடியாக இதழில் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே, சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் லட்சக்கணக்கான உயிரைப் பறித்த கொரோனா வைரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இந்த வைரஸ் உருமாற்றத்தால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு புதிய அச்சுறுதல்களை ஏற்படுத்தியது.

இந்த ஆய்வுக் குழுவானது ஸ்டோமாடிடிஸ் வைரஸ் (விஎஸ்வி) எனப்படும் வைரஸைப் பயன்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் ஆனது எபோலா வைரஸிலிருந்து கிளைகோபுரோட்டீனை (ஜிபி) கொண்டு செல்ல மாற்றப்பட்டது. இந்த புரதம் வைரஸ் புரவலன் செல்களுக்குள் நுழைந்து பாதிக்க மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நீங்க தினமும் கடைபிடிக்கும் இந்த பழக்கங்கள் தைராய்டை ஏற்படுத்துமாம்

ஆராய்ச்சியின் அறிகுறிகள்

விஞ்ஞானிகள் சோதனை சிறிய குழுவின் மூலம் நடத்தினர்.

இதில், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் வெள்ளெலிகளுக்கு ஊசி செலுத்தியவுடன், இந்த வடிவமைக்கப்பட்ட வைரஸ் கடுமையான அறிகுறிகளை உருவாக்கியது.

இந்த அறிகுறிகள் நோய்கள் மற்றும் பல உறுப்பு செயலிழப்புகளை ஏற்படுத்தலாம். இது விலங்குகளின் மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

மூன்று நாட்களுக்குள்ளாக சில வெள்ளெலிகள் தங்கள் கண்களில் சுரப்புகளை வெளிப்படுத்தியது. இது அவர்களின் பார்வை பாதிப்பதாக அமைகிறது. இது பார்வை நரம்பு கோளாறுகளுடன் தொடர்புடைய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

இந்த அறிகுறிகள் எபோலா வைரஸ் நோய் (EVD) நோயாளிகளில் காணப்படுகிறது.

இந்த ஆய்வின் பின்னணியின் முதன்மை உந்துதல்களில் ஒன்றாக அமைவது, உயிரியல் பாதுகாப்பு நிலை 4 (பிஎஸ்எல்-4) வசதிகள் இல்லாமல், எபோலா அறிகுறிகளைப் பாதுகாப்பாகப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விலங்கு மாதிரியை நிறுவுவது ஆகும். எபோலா ஆராய்ச்சிக்கு மிகவும் பாதுகாப்பான ஆய்வகங்கள் தேவையாகும். இதன் மூலம் வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

ஆனால் பெரும்பாலான உலகளாவிய வசதிகள் BSL-2 தரநிலைகளை மட்டுமே சந்திக்கிறது. இதனால், ஆராய்ச்சியாளர்கள் எபோலா ஜிபியுடன் வடிவமைக்கப்பட்ட VSV ஐப் பயன்படுத்தி குறைந்த பாதுகாப்பு சூழல்களில் ஆய்வு செய்யக்கூடிய மாதிரியை உருவாக்கியுள்ளனர். இந்த மாதிரி உருவாக்கத்தில் எபோலா மற்றும் சாத்தியமான சிகிச்சைகள் பற்றிய பரவலான மற்றும் அணுகக்கூடிய ஆராய்ச்சிக்கு அனுமதிக்கிறது.

இதில் வெள்ளெலிகள் இறந்த பிறகு, வைரஸின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் அதன் உறுப்புகளை அறுவடை செய்தனர். இந்த ஆய்வில் கல்லீரல், இதயம், நுரையீரல், மண்ணீரல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் மூளை போன்ற முக்கிய திசுக்களில் வைரஸ் குவிந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த பரவலான வைரஸ் தாக்கம், பல உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸின் திறனை உறுதிப்படுத்தியது. இந்த எபோலா வைரஸ் மனிதர்களில் பல்வேறு விளைவுகளை பிரதிபலிக்கலாம்.

இந்த வைரஸ் கண்டுபிடிப்புகள் நோய்களின் தாக்கத்தைக் கண்டறிதவதாக இருப்பினும், பாதுகாப்பு இல்லாத இடங்களிலிலிருந்து வைரஸ் பரவுவது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Rainy Diseases: மழைக்காலத்தில் பரவும் நோய்த்தொற்றுக்களும், அதனைத் தடுக்கும் முறைகளும் இதோ!

Image Source: Freepik

Read Next

Hormonal Acne: ஹார்மோன் சமநிலையின்மையால் முகப்பரு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? காரணம் இதோ!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version