Expert

நல்ல தூக்கம் வேண்டுமா? தூங்கும் முன் இந்த இரண்டு பொருள்கள் கலந்த தண்ணீரைக் குடிங்க..

நல்ல தூக்கத்தைப் பெறவும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் இரவில் சில பொருள்களைச் சேர்க்கலாம். இதில் இரவில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன பொருள்களைச் சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நல்ல தூக்கம் வேண்டுமா? தூங்கும் முன் இந்த இரண்டு பொருள்கள் கலந்த தண்ணீரைக் குடிங்க..


இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இன்றைய நவீன காலத்தில் பலரும் நல்ல தூக்கம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது அதிக திரை நேரம் ஆகும். குறிப்பாக, இரவு தூங்கும் முன்பாக அதிக நேரம் திரையைப் பார்ப்பது அவர்களின் தூக்கத்தை மோசமாக பாதிக்கக்கூடும். இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை பெரிதும் பாதிக்கப்படலாம்.

ஒருவர் நல்ல இரவு தூக்கத்தைப் பெறாத போது அவர்கள் அன்றைய நாளுக்குத் தேவையான புத்துணர்ச்சியை இழக்கின்றனர். எனினும், நல்ல விஷயமாக நல்ல இரவு தூக்கத்திற்கு அன்றாட வாழ்வில் சில உணவுப் பொருள்களைச் சேர்க்கலாம். சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், சீரான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறவும் வழிவகுக்கிறது. இதில், நல்ல இரவு தூக்கம் மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த இரவில் என்ன சாப்பிடலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: படுத்த உடனே நல்லா தூங்கணுமா? ஆழ்ந்த தூக்கத்திற்கு இந்த 5 வழிகளைப் பின்பற்றுங்க

நல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும்?

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு மருத்துவ ஊட்டச்சத்து நிபுணராக, சிறந்த தூக்கத்திற்கு கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூவை நான் பரிந்துரைக்கிறேன். இந்த இயற்கை பொருட்கள் உங்கள் தூக்கத்தின் கால அளவை அதிகரிக்கவும், மெலடோனின் மற்றும் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன” என்று தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.

மேலும் அவர், இந்த இரண்டு பொருள்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதை இரவில் எப்படி சாப்பிடலாம் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

கருப்பு திராட்சை குங்குமப்பூ நீரின் நன்மைகள்

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சையில் ஆக்ஸிஜனேற்றிகள் ரெஸ்வெராட்ரோல் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளதாகவும், இவை தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுவதாக மருத்துவர் குறிப்பிடுகிறார்.

அதாவது, கருப்பு திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் தூக்கத்தை ஒழுங்குபடுத்தி, ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தி, நல்ல தூக்கத்தைப் பெற உதவுகின்றன.

குங்குமப்பூ

நிபுணரின் கூற்றுப்படி,”இந்த சக்திவாய்ந்த மசாலாவில் சஃப்ரானல் போன்ற கலவைகள் உள்ளன. இவை செரோடோனின் அளவை உயர்த்துகிறது. மேலும் இது தளர்வை ஊக்குவிக்க உதவுகின்றன. இந்த மசாலா ஆனது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்து மிகவும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது” என பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நைட் ஷிப்ட் உங்களின் இந்த உறுப்பை ரொம்ப பாதிக்கும்.. அதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்ய உதவும் வழிகள்! டாக்டர் பால் பரிந்துரை

குறிப்பாக, குங்குமப்பூவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள குரோசின், குரோசெடின், மற்றும் சஃப்ரானால் போன்ற சேர்மங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதட்டத்தைக் குறைத்து தூக்கத்தின் தரம் மற்றும் காலத்தை மேம்படுத்த உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

தூக்கம் பெற கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூவை சாப்பிடும் முறை

  • முதலில் 100 மிலி அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதில் 3 முதல் 4 கருப்பு திராட்சைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • மேலும் சிறிதளவு குங்குமப்பூ இதழ்களைச் சேர்க்கலாம்.
  • இவை இரண்டையும் தண்ணீரில் 4 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
  • பின் இரவு தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக இந்த ஊறவைத்த கலவையை சாப்பிடலாம்.

இவ்வாறு இரவில் இந்த பானம் தயார் செய்து குடிப்பது நாளடைவில் தூக்கத்தின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த உதவுவதாக நிபுணர் பகிர்ந்துள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இனி மாத்திரை போட்டு தூங்க வேண்டாம்.? இதை குடித்தாலே போதும்.!

Image Source: Freepik

Read Next

முகத்தில் சிரிக்கும் போது தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும் சிறந்த வழிகள் இதோ.. மருத்துவர் பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 22, 2025 11:47 IST

    Published By : கௌதமி சுப்ரமணி