Natural Home Remedies: மழைக்காலம் வந்துவிட்டது.. சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியம்!

  • SHARE
  • FOLLOW
Natural Home Remedies: மழைக்காலம் வந்துவிட்டது.. சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியம்!


Natural Home Remedies: மழைக்காலம் இருந்தால் மகிழ்ச்சி தான். குளிர்ச்சியான சூழ்நிலை, வெயிலில் இருந்து விடுதலை என பல நிம்மதிகள் கிடைக்கும். அதேநேரத்தில், பருவக் கால நோய்களும் பரவத் தொடங்கிவிடுகிறது. வானிலை மாறும் அதற்கு ஏற்ப நோய்களும் பரவுவது வழக்கம். பலருக்கும் பரவும் உடல்நலப் பிரச்சனைகளில் இருமல் மற்றும் சளி பொதுவானது. அவற்றை லேசாக எடுத்துக்கொள்வது, இது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அவற்றை குறைக்கும் வீட்டு வைத்திய முறைகளை பார்ப்போம்.

இருமல் மற்றும் சளி போக்கும் வீட்டு வைத்தியம்

நாம் இருமல் மற்றும் சளி இல்லாமல் இருந்தால் நாம் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறோம். இருமல், சளி இருந்தால் தொண்டையில் வித்தியாசமான உணர்வு வரும், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளும் வரும் தொடர்ந்து படிப்படியாக மனச்சோர்வுக்கு ஆளாகிறோம். இருமல் மற்றும் சளி, நம் உடலில் பல கோளாறுகளை உண்டாக்குகிறது. காய்ச்சல், தலைவலி, வலிகள் ஒவ்வொன்றாக வரும். எனவே, இருமல், சளி வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் சூடாக்கும் உணவு மற்றும் காரமான உணவுகளை குறைக்க வேண்டும்.

இதையும் படிங்க: Detox Liver: இதை குடித்தால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும்!

இதுபோன்ற பருவ கால பிரச்சனைகள் வரும் போது பலர் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். இது ஆபத்தானது, ஏனெனில், ஒவ்வொரு சிறு நோய்க்கும் மாத்திரை சாப்பிட்டால், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

சூடான திரவங்களை குடிக்கவும்

வெந்நீர் மற்றும் சூடான திரவங்களை சிறிது சிறிதாக குடிக்கவும் (டீ குடிப்பது போல்). உங்களுக்கு காய்ச்சல் இருக்கும்போதும் அவ்வாறே செய்யுங்கள். வெதுவெதுப்பான தண்ணீர், வெதுவெதுப்பான சூப்களை குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வாய் கொப்பளிக்கவும்

வாயில் தண்ணீர் ஊற்றி, ஓரிரு நிமிடங்கள் கொப்பளிக்கவும், பின் வெளியே துப்புங்கள். இப்படி இரண்டு முறை செய்தால், தொண்டையில் நிவாரணம் கிடைக்கும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும். வெதுவெதுப்பான நீரில் உப்பு அல்லது மஞ்சளுடன் வாய் கொப்பளிப்பது தொண்டை புண் மற்றும் வறண்ட உணர்வை தற்காலிகமாக நீக்கும்.

ஓய்வு தேவை

இருமல், சளி போன்றவை இருக்கும்போது ஆற்றல் அளவு குறையும். இதில் இருந்து திரும்பிவர கொஞ்சம் ஓய்வு தேவை. அப்படி ஓய்வு எடுப்பதால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருமல், ஜலதோஷம் அதிகமாக இருக்கும்போது அலுவலகம் சென்று வேலை செய்வதை விட அன்றைய தினம் ஓய்வெடுத்தால்… ஒரே நாளில் நோய் நீங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். நோய்களை மேலும் தீவிரப்படுத்தாமல் சற்று ஓய்வெடுங்கள்.

மஞ்சள் பால்

இது பழங்காலத்திலிருந்தே உள்ளது. நம் முன்னோர்கள் கூட மஞ்சள் பாலை அருந்தியிருக்கிறார்கள். அதனால்தான் ஆரோக்கியமாக இருந்தார்கள். இருமல் மற்றும் சளியால் அவதிப்படுபவர்கள் இந்த மஞ்சள் பாலை குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். அதிகப்படியான சளியால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க: வெயிலினால் முதுகில் ஏற்பட்ட கருமை நீங்க இந்த 5 வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்களேன்!!!

மிளகு, தேன்

ஒரு டீஸ்பூன் மஞ்சள், கருப்பு மிளகு, தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை துளசி டீ குடிக்கவும். நெல்லிக்காய், அன்னாசி, எலுமிச்சை, கிவி போன்ற புளிப்பு பழங்கள் உணவில் ஒரு நல்ல பகுதியாகும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஏழு முதல் எட்டு துளசி இலைகள், ஒரு சிறிய துண்டு இஞ்சி, சில பூண்டு துண்டுகள், தலா ஒரு தேக்கரண்டி சீரகம், வெந்தயம், மஞ்சள் மற்றும் நான்கைந்து கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கலவையை காலையில் எழுந்தவுடன் குடிக்கவும்.

image source: freepik

Read Next

Constipation Home Remedy: மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!

Disclaimer

குறிச்சொற்கள்