Doctor Verified

குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா.? ஆயுர்வேத நிபுணர் விளக்கும் உண்மை..

குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? யாருக்கு பாதுகாப்பு இல்லை? ஆயுர்வேத மருத்துவர் விளக்கும் நன்மைகள் மற்றும் எச்சரிக்கைகள்.
  • SHARE
  • FOLLOW
குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா.? ஆயுர்வேத நிபுணர் விளக்கும் உண்மை..

சீரகத் தண்ணீர் (Jeera Water) என்பது ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு இயற்கை மருத்துவப் பானம். செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் பலர் தினமும், குறிப்பாக இரவில் அல்லது காலை வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.


முக்கியமான குறிப்புகள்:-


ஆனால், குளிர்காலத்திலும் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா? இதனால் உடலுக்கு நன்மையா அல்லது தீமையா? இந்த கேள்விகளுக்கு சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஷ்ரே சர்மா விளக்கம் அளிக்கிறார்.

குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா?

ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஷ்ரே சர்மாவின் கூற்றுப்படி, சீரகம் இயற்கையாகவே வெப்பத் தன்மை கொண்டது. எனவே, குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது பொதுவாக பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாகும்.

ஆனால், பித்த இயல்பு அதிகமாக உள்ளவர்கள், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், சீரகத் தண்ணீரை அதிக அளவில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

1. உடலை இயற்கையாக சூடாக வைத்திருக்கும்

ஆயுர்வேதத்தின் படி, சீரகம் உஷ்ண குணம் கொண்டது, இது செரிமான நெருப்பை (Agni) தூண்டி, கபம் மற்றும் வாத தோஷங்களை சமநிலைப்படுத்துகிறது. இதனால் குளிர்காலத்தில் உடல் அதிகமாக குளிர்வதைத் தடுக்கும்.

2. செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம்

குளிர்காலத்தில் அதிக எண்ணெய் உணவுகள், வறுத்த உணவுகள் சாப்பிடுவதால், வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். சீரகத் தண்ணீர் செரிமானத்தை தூண்டி, வயிற்றை லேசாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவும்: தைராய்டு பிரச்சனைகளுக்கு சீரகம் நன்மை தருமா? நிபுணர் விளக்கம் – எப்படி உட்கொண்டால் பயன் அதிகரிக்கும்?

3. சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வெதுவெதுப்பான சீரகத் தண்ணீர் சளி நெரிசலை குறைக்க காற்றுப்பாதைகளை சுத்தம் செய்ய - இருமல், சளி, காய்ச்சல் பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது

சீரகத்தில், Antioxidants, Iron, Vitamin A & C நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவகால தொற்றுகளைத் தவிர்க்க உதவுகிறது.

குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பதை யார் தவிர்க்க வேண்டும்?

சீரகத் தண்ணீர் அனைவருக்கும் ஏற்றதல்ல. பின்வரும் நபர்கள் கவனம் செலுத்த வேண்டும்:

* நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்

* இரத்த உறைதல் பிரச்சனை உள்ளவர்கள்

* அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள்

* கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

இவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை உட்கொள்ள வேண்டாம்.

இறுதியாக..

சீரகத் தண்ணீர் ஒரு சிறந்த இயற்கை பானமாக இருந்தாலும், அளவோடு மற்றும் உடல் தன்மையை அறிந்து குடிப்பது அவசியம். குளிர்காலத்தில் சரியான முறையில் சீரகத் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தவும் உதவும். ஆனால், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான ஆரோக்கிய தகவல்களுக்காக மட்டுமே. நீண்டகால நோய்கள், கர்ப்பம் அல்லது மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

குளிர்காலத்தில் படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடியுங்கள்.! உடனே கிடைக்கும் 5 அதிசய நன்மைகள் இங்கே..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 13, 2025 20:39 IST

    Published By : Ishvarya Gurumurthy