Expert

Water After Tea: டீ குடித்த பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Water After Tea: டீ குடித்த பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!


Does Tea Hydrate Better Than Water: நாம் அனைவரும் நமது நாளை ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் தான் துவங்குவோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இங்கே டீ பிரியர்கள் ஏராளம். உணவு இல்லாமல் கூட நாள் முழுக்க டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் மனிதர்கள் ஏராளம். ஏனென்றால், டீ என்பது வெறும் பானம் அல்ல, அது ஒரு உணர்வு.

தேநீர் அருந்திய பின், நம் கை கண்டிப்பாக தண்ணீர் குவளையை நோக்கி செல்லும். அதாவது, நம்மில் பலருக்கு டீ குடித்த பின் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். டீ குடித்த பின் தண்ணீர் குடிக்க கூடாது என பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும், அந்த வார்த்தையில் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் டீ குடித்துவிட்டு தண்ணீர் குடித்தால் பற்கள் உதிர்ந்துவிடும் என்று கூறுவது வழக்கம். இது உண்மையா? டீ குடித்த பின் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதன் தீமைகள் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Cranberry Benefits: UTI பிரச்னை முதல்… புற்றுநோய் வரை… குருதிநெல்லி நன்மைகள் இங்கே…

டீ குடித்த பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?

தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பதால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பற்கள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறும். இது பையோரியா போன்ற பற்களில் மற்ற வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதே சமயம், சூடான டீ குடித்துவிட்டு குளிர்ந்த நீரை குடிப்பதால், வாயின் வெப்பநிலை மாறுகிறது. இது பற்களின் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பற்களின் மேல் அடுக்கான பற்சிப்பியும் கணிசமாக சேதமடைகிறது மற்றும் உணர்திறன் அதிகரிக்கிறது.

சூடான டீ குடித்துவிட்டு குளிர்ந்த நீரை குடிப்பதால் சளி, சூடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால், சில நேரங்களில் இருமல், சளி போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. உங்கள் தொண்டை புண் கூட ஆகலாம். அதே போல, தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Green Peas Properties: புற்றுநோயை உண்டாக்கும் பச்சைப் பட்டாணி சாயம்! எப்படி கண்டறிவது?

இதனால், உங்களுக்கு லூஸ் மோஷன் இருக்கலாம். வாயு, அமிலத்தன்மை மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். எனவே, நீங்கள் எப்பொழுதும் நிறுத்தி தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது தேநீர் அருந்தும் முன் தண்ணீரையும் குடிக்கலாம்.

டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?

டீ அல்லது காபிக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கலாம். தேயிலையில் தோராயமாக 6 (அமிலத்தன்மை) pH உள்ளது. அதே சமயம் காபியில் 5 pH உள்ளது (இது அமில வரம்பிற்கு உட்பட்டது). எளிமையாக கூறினால், காலை அல்லது மாலையில் டீ அல்லது காபி குடிப்பது அமிலத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் கடுமையான நோய்கள், அல்சர் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : மழைக்காலத்தில் இளநீர் குடிக்கலாமா? நிபுணர்கள் கூறும் உண்மை

தேநீர் அல்லது காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது வயிற்றில் அமில அளவைக் குறைக்க உதவுவதோடு, வயிறு மற்றும் ஒட்டுமொத்த உடல்நலக் கேடுகளையும் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக அமிலத்தன்மை இருப்பதால், இது பற்களில் தேநீரின் விளைவையும் குறைக்கிறது. குடிநீரானது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் மாசுகளை அகற்ற உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

பேக்கேஜ் செய்யப்பட்ட பாலை கொதிக்க வைக்க வேண்டுமா? வேண்டாமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version