Coffee Drinking Time: வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் முன்னேற மக்கள் இரவு பகல் பாராமல் மும்முரமாக வேலை செய்கிறார்கள். இது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரவில் வேலை செய்யும் போது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பலர் இரவில் கண் வழித்து வேலை செய்ய காபி குடிப்பது உண்டு. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் இரவில் தூக்கமின்மை பிரச்சனை அதிகரிக்கிறது. பலரும் காபி குடிப்பது எதற்கு என்றே தெரியாமல் வேலைக்கு நடுவில் காபி குடிப்பார்கள்.
முக்கிய கட்டுரைகள்
சூடாக எதையாவது குடித்தால் சுறுசுறுப்பான உணர்வு ஏற்படும் அது சுவையான காபியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தே பலரும் இதை குடிக்கிறார்கள். அப்படியே பலரும் காபிக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
இரவில் தாமதமாக காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா?

சர்க்காடியன் ரிதம் பாதிப்பு
தூக்கம் மற்றும் எழுந்திருக்கும் இயற்கையான செயல்முறையே சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது. இது தோராயமாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இரவில் காபி குடிப்பது உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும்.
உண்மையில், காஃபின் மற்றும் தூண்டுதல்கள் காபியில் உள்ளன, இது உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தை கெடுக்கும். இதனால் உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
தூக்கத்தின் தரம் குறையும்
இரவில் காபி குடிப்பதால் தூங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சில காரணங்களால் சிலர் தூங்கினாலும், அவர்களின் தூக்கத்தின் தரம் குறைகிறது. காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக, அடுத்த நாள் முழுவதும் சோம்பல் மற்றும் சோர்வு போன்ற உணர்வை சந்திக்கிறார்கள்.
கவலை மற்றும் அமைதியின்மை
காபி ஒரு நபரின் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இரவில் அதை உட்கொள்வது தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். உடல் மற்றும் மன மட்டத்தில் அதிகப்படியான கவலை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தி தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
மெலடோனின் உற்பத்தியில் சிக்கல்
மெலடோனின் "தூக்க ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. இது தூக்கத்தைத் தூண்டுவதோடு, தூங்கி எழுவதையும் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரவில் காபி குடிப்பது மெலடோனின் வெளியீட்டை தாமதப்படுத்தும், இது தூக்க செயல்முறையை சீர்குலைக்கும்.
இரவில் அதிக சிறுநீர் கழித்தல்
காபியில் காஃபின் எனும் டையூரிடிக் உள்ளது. இது சிறுநீரின் அளவை அதிகரிக்கும், இரவில் காபி குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும். இது ஒரு நபரின் தூக்கத்தை சீர்குலைத்து, தூக்கத்தின் தரத்தை குறைக்கலாம்.
மருத்துவரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு சீக்கிரம் தூங்குவது மிகவும் அவசியம். நாம் தூங்கும் போது நமது உடலில் உள்ள இறந்த செல்கள் சரி செய்யப்படுகின்றன.
இந்த நேரத்தில் உடலின் பல செல்கள் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. எனவே, தூங்குவதன் மூலம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம். இதனால் இரவில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
Pic Courtesy: FreePik