Washing Hair Daily: நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பவரா? அப்போ இதை கண்டிப்பா படியுங்க!

  • SHARE
  • FOLLOW
Washing Hair Daily: நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பவரா? அப்போ இதை கண்டிப்பா படியுங்க!


what happens if i wash my hair daily: நம்மில் பெரும்பாலானோருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தால், பல வகையான சேதங்கள் முடிக்கு ஏற்படலாம். இன்னும் சிலர் தலைக்கு தினமும் ஷாம்பு பயன்படுத்துவார்கள். இதனால், முடி வறண்டு, முடி உதிர்வுக்கு அதிகரிக்கும். ஷாம்பு தயாரிக்க பல வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், அவற்றை தினமும் நாம் தலைக்கு பயன்படுத்தினால், முடி அதன் பிரகாசத்தை இழந்து, உச்சந்தலை வறட்சி மற்றும் முடி சேதத்தை ஏற்படுத்தும்.

பல பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் தலைமுடியைக் கழுவுவது மட்டும் அல்லாமல் கண்டிஷனரையும் பயன்படுத்துகிறார்கள். இதனால், தலை முடிக்கு பல வகையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து, முடியின் ஆரோக்கியம் கெடும். தினமும் தலைமுடிக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!

உச்சந்தலை வறட்சி

தலைமுடியை தினமும் ஷாம்பு போட்டு அலசுவது வறண்ட ஸ்கால்ப் பிரச்சனையை உண்டாக்கும். உச்சந்தலையில் இயற்கை எண்ணெய் உள்ளது, இது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் தலைமுடியைக் கழுவுவது உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. இதன் காரணமாக, உச்சந்தலையில் வறட்சி ஏற்படுவதுடன், தலையில் அரிப்பு பிரச்சனையும் அதிகரிக்கும்.

முடியின் பிரகாசம் குறையும்

தினமும் ஷாம்பு போட்டு தலைமுடியை அலசுவதால், கூந்தல் பொலிவை இழந்து மிகவும் வறண்டு காணப்படும். தினமும் ஷாம்பு போடுவதால் தலைமுடியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும். இதனால் முடியின் பொலிவு குறையும். ஒவ்வொருவரின் தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பு இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினமும் ஷாம்பு போடுவது முடியின் பொலிவை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

முடி உதிர்வு பிரச்சனை

நீங்கள் அளவுக்கு அதிகமான முடி உதிர்வு பிரச்சினையை சந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் ஷாம்பு போடுவது முடி உதிர்வை அதிகரிப்பதோடு, முடியையும் சேதப்படுத்தும். தினமும் ஷாம்பு போடுவது முடியை சேதப்படுத்துவது மட்டுமின்றி, சிக்கலையும் ஏற்படுத்துகிறது.

பொடுகு பிரச்சனை

தினமும் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது பொடுகு பிரச்சனையை அதிகரிக்கும். இதன் காரணமாக, கூந்தலில் அரிப்பு மற்றும் சொறி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. தினமும் ஷாம்பு போட்டு வருவதால் உச்சந்தலை வறண்டு போகும். இதன் காரணமாக பொடுகு வேகமாக அதிகரிக்கிறது. அதே நேரத்தில், பொடுகு காரணமாக முடி உதிர்தலும் அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!

தலைமுடி பிளவு

ஷாம்பு தயாரிப்பில் பல வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தினமும் தலைமுடியை ஷாம்பு போட்டு அலசுவது கூந்தலை உயிரற்றதாக மாற்றிவிடும். இதன் காரணமாக முனைகள் பிளவுபடும் பிரச்சனை ஏற்படலாம். தினமும் ஷாம்பு போடுவது முடியை சேதப்படுத்துகிறது மற்றும் பிளவுகளுக்கு வழிவகுக்கிறது, இது முடி வளர்ச்சியை பாதிக்கிறது.

தலைமுடியை வாரத்திற்கு எத்தனை முறை கழுவ வேண்டும்?

தினமும் தலைமுடியைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது நாளிலும் முடியை கழுவலாம். இப்படி செய்தால் முடி பிரச்சனைகள் குறையும். அதே போல, தினமும் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது பல வகையான தீங்குகளை ஏற்படுத்தும்.

Pic Courtesy: Freepik

Read Next

Melanin Production Foods: கூந்தலில் மெலனின் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை சாப்பிடுங்கள்!

Disclaimer