Sat Sep 12, 2026 | 01:53 AM IST

Doctor Verified

Pierced Ears Care: குளிர்காலத்தில் காது குத்தினால் இந்த பிரச்சனை எல்லாம் வருமாம். எப்படி தவிர்க்கலாம்?

Winter Care Tips For Newly Pierced Ears: சிலருக்கு சிறுவயதிலேயே மூக்கு மற்றும் காது குத்தப்படும். இன்னும் சிலர் வளர்ந்த பிறகு குத்திக் கொள்வர். இது பாதுகாப்பான நடைமுறை இல்லை எனினும், மக்கள் இதை பொழுதுபோக்கிற்காகவும், அழகிற்காகவும் மூக்கு, காது மற்றும் உடலின் பிற பகுதிகளில் குத்திக் கொள்கின்றனர்.

ஆனால், புதிதாக குத்தியவர்களுக்குக் குறிப்பாக குளிர் காலம் கடினமாக இருக்கும். ஏனெனில், இந்த நேரத்தில் சளி எளிதாக ஏற்படும். இந்நிலையில், துளையிடப்பட்ட இடத்தில் மேலும் வலி ஏற்படலாம். இதில் குளிர்காலத்தில் துளையிடுவதைப் பெற்றிருந்தால், புதிய துளையிடுதலை கவனித்துக் கொள்ள வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம். இது குறித்து லக்னோவில் உள்ள ஓம் ஸ்கின் கிளினிக்கின் மூத்த ஆலோசகர் தோல் மருத்துவர் தேவேஷ் மிஸ்ரா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

குளிர்காலத்தில் துளையிடப்பட்ட இடத்தை பராமரிப்பது எப்படி

குளிர்காலத்தில் காது துளையிடப்பட்ட இடத்தைச் சுற்றி ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட சில குறிப்புகளைப் பின்பற்றலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!

துளையிடப்பட்ட காதுகளைச் சுற்றி வறட்சி ஏற்படுதலைத் தவிர்த்தல்

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகலாம். எனவே வறண்ட சருமத்திலிருந்து காதுகளைப் பாதுகாக்க போதுமான அளவு நீர் குடிக்க வேண்டும். இது தவிர, ஆன்டி செப்டிக் கிரீம் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தரலாம். மருத்துவரின் ஆலோசனைப் படி, இந்த வறட்சியைத் தவிர்க்க லோஷன் அல்லது கிரீம் பயன்படுத்தலாம்.

துளையிடப்பட்ட இடத்தில் மஞ்சள் தடவுதல்

புதிதாக குத்தியிருந்தால், தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும். இதனால் ஏற்படும் வலி, துளையிட்ட பிறகு சில வாரங்களுக்கு மேல் நீடிக்கலாம். இந்த சூழ்நிலையில், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க காதில் மஞ்சளைத் தடவலாம். மஞ்சளில் உள்ள கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வலி நிவாரணியாக செயல்படுகிறது. மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கெட்டியான பேஸ்ட் போல் தயாரித்து காதுகளில் துளையிடப்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் பூசலாம்.

சூடான ஆடைகளை காதுகளில் இருந்து விலக்கி வைப்பது

சூடான ஆடைகளை காதுகளில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. பொதுவாக, நாம் குளிர்காலத்தில் அதிக அடுக்குகள் கொண்ட ஆடைகளை அணிவோம். இதில் காது நகைகள் சிக்கி, கடுமையான வலியை உண்டாக்கலாம். இது தவிர, கம்பளி, சூடான ஆடை துணியானது காதுகளின் தோலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, காதுகளைச் சூடான ஆடைகளிலிருந்து விலக்கி வைப்பது நல்லது. ஏனெனில், இவை தொற்றை உண்டாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

காது குத்திய இடத்தைச் சுத்தம் செய்யுதல்

காது குத்திய இடத்தைச் சுத்தம் செய்வது மிக முக்கியம் ஆகும். குறிப்பாக சமீபத்தில் காது குத்தப்பட்டிருப்பின், அவர்களுக்கு புதிய துளையிடுதலில் தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம். துளையிடுதலைச் சுத்தம் செய்ய பாக்டீரியா எதிர்ப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு, துளையிடும் இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம்.

சுத்தம் செய்த பிறகு, காது நகைகளை அணிதல்

கோடையில் தான் தொற்று அதிகம் இருக்கும் என கருதுகிறோம். ஆனால், அது அப்படி அல்ல. குளிர்காலத்திலும் காது தொற்று அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த தொற்று ஏற்பட்டால், காதுகளில் எந்த நகைகளை அணிவதாக இருந்தாலும், அது சுத்தமாக இருக்க வேண்டும். மேலும், நகைகளைச் சுத்தம் செய்ய முகம் கழுவும் தண்ணீரையும் உபயோகிக்கலாம். பிரஷ் ஒன்றின் மூலம் நகைகளைச் சுத்தம் செய்த பின், உலர்த்தி பின்னரே காதுகளில் அணிய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..

Image Source: Freepik

Read Next

Cold Water Bath: குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content