நிகழ்கால பெண்கள் தங்கள் மார்பகத்தை அழகின் ஆதாரமாக கருதுகிறார்கள். குறிப்பாக மார்பகம் பெரிதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கேற்ப மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள அறிவியல் வசதிகளும் உள்ளன. முன்பு இது போல் இல்லை. அப்போதும் மார்பகம் அழகாகவும் பெரிதாகவும் உள்ள பெண்கள் இருந்தார்கள். அவர்கல் இயற்கை முறையில் அவர்களது மார்பகத்தை பாதுகாத்து வந்தனர். மார்பகத்தை இயற்க்கை முறையில் பெரிதாக்க முடியும். இதற்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மார்பக மசாஜ் செய்யுங்கள் :

சுமார் ஒரு மாதத்திற்கு உங்கள் மார்பகத்திற்கு சரியான முறையில் மசாஜ் கொடுத்தால், மார்பகம் பெரிதாகும். இது மார்பகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆகையால் இயற்கை எண்ணெய்யை பயன்படுத்து மார்பகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இதற்கு ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவும். இது சிறந்த முடிவுகளை கொடுக்கும்.
முக்கிய கட்டுரைகள்
பால் குடியுங்கள்:
இயற்கை முறையில் மார்பகத்தை பெரிதாக விரும்பும் பெண்கள், தனமும் பால் குடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மார்பகத்தை பெரிதாக்கும் முயற்ச்சியில் பால் சிறந்து திகழ்கிறது. இதில் உள்ள புரோலாக்டின், புரோஜெஸ்டரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை மார்பக அளவை பெரிதாக்க உதவும்.
வெந்தயம் சாப்பிடவும்:

மார்பக அளவை அதிகரிப்பதில் வெந்தயம் சிறந்த பங்கு வகிக்கிறது. இது புரோலாக்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்க உதவுகிறது. இது மார்பக திசு வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மேலும் வெந்தய பொடியை பாலில் சேர்த்து குடிக்கவும். இது உங்கள் மார்பக அளவை இயற்கையான முறையில் பெரிதாக்க உதவுகிறது.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தகவல் நோக்கத்துக்காக மட்டுமே. இதன் உண்மை தன்மையை அறிந்து, இயற்கையான முறையில் மார்பகத்தை எப்படி பெரிதாக்கலாம் என உங்கள் நிபுணரிடன் கலந்தாலோசிக்கவும்.
Image Source: Freepik