கோடை காலம் தொடங்கும் முன்பே, வெப்பம் வெளுத்து வாங்கி வருகிறது. வியர்வை மற்றும் உடல் நீர் குறைகிறது. இந்த நிலையில் தர்பூசணி சிறந்த பழம். உடலில் நீர்ச்சத்து சரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தப் பழத்தில் பல நன்மைகள் உள்ளன.
ஆனால் சந்தையில் உள்ள மற்ற கலப்பட உணவுகள் போல கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணிகளும் கிடைக்கின்றன. அவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக, தீங்குதான் அதிகம். உண்மையான தர்பூசணி மற்றும் போலி தர்பூசணியை எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்…
முக்கிய கட்டுரைகள்
தர்பூசணியின் நன்மைகள்:
நீரேற்றமாக வைத்திருக்கிறது - கோடைக்காலம் என்றால் உடலில் இருந்து நிறைய நீர் இழப்பு ஏற்படுவது வழக்கமானது. தர்பூசணி தண்ணீரைத் தக்கவைக்க உதவுகிறது.
சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் - தர்பூசணி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். தர்பூசணியில் நார்ச்சத்து இருப்பதால் இந்த சிறப்பு குணம் உள்ளது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது - நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வீக்கத்தை நீக்குகிறது - உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அழற்சியின் பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். தர்பூசணியின் தரம் அந்த வீக்கத்தை நீக்குகிறது.
நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் - வெப்பத்தில் மந்தமாக இருப்பது சகஜம். ஏனெனில் உடலில் நீரின் அளவு குறைகிறது. இதற்கிடையில், மூளை பெரும்பாலும் தண்ணீர். எனவே தர்பூசணி நீரின் அளவைப் பராமரிப்பதன் மூலம் நரம்புகளை வலுவாக வைக்கிறது.
எடை குறைக்க உதவுகிறது - தர்பூசணி எடை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
தர்பூசணியில் கலப்படம் இருப்பதைக் கண்டறிவது எப்படி?
செயற்கை சிவப்பு சாயம்:
தர்பூசணிகள் பழுத்த தோற்றமளிக்க எரித்ரோசின் என்ற சிவப்பு சாயம் சேர்க்கப்படுகிறது. இது ஒரு பருத்தி மூலம் அடையாளம் காணக்கூடியது.
உண்மையான தர்பூசணியின் சிவப்பு பகுதியில் பருத்தி துணியால் மெதுவாக தேய்த்தால் எந்த நிறமும் நீங்காது. ஆனால் போலி தர்பூசணி மீது பருத்தியைத் தெய்த்தால் அதில் சிவப்பு நிறம் ஒட்டிக்கொள்வதைக் காணலாம்.
சுவை குறைவது:
இயற்கையான தர்பூசணி அதன் சுவை மூலம் அடையாளம் காணக்கூடியது. சுவை குறையாது. ஆனால் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியில் இருந்து எந்த சுவையும் இருக்காது.
வேகமாக அழுகும்:
பலர் தர்பூசணிகளை வாங்கி சேமித்து வைப்பார்கள். இயற்கையான தர்பூசணி பழங்கள் எளிதில் கெட்டுப்போகாது. அதுவுவே ரசாயனம் ஏற்றப்பட்ட தர்பூசணி என்றால், விரைவில் அழுகிவிடும்.
தர்பூசணியை வாங்கி இரண்டு நாட்கள் வைத்திருக்கவும். ஒருவேளை அதில் ரசாயன கலப்படம் செய்யப்பட்டிருந்தால் விரைவில் அழுகிவிடும்.
ஒரு கடாயில் இதை முயற்சிக்கவும்:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடாக்கி, ஒரு துண்டு தர்பூசணி சேர்க்கவும். தண்ணீர் விரைவில் சிவப்பு நிறமாக மாறினால், தர்பூசணி சாயம் பூசப்பட்டது என்பதை அறியலாம்.
Image Source: Freepik