Eye Health Tips: உஷ்ணத்தால் உங்க கண் எரிச்சலுடன் நீர் வடிகிறதா? அப்போ இந்த விஷயங்களை செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Eye Health Tips: உஷ்ணத்தால் உங்க கண் எரிச்சலுடன் நீர் வடிகிறதா? அப்போ இந்த விஷயங்களை செய்யுங்க!


What is the fastest way to heal irritated eyes: கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கிற வெயிலை பார்க்கும் போது வீட்டை விட்டு வெளியில் செல்லவே நம்மில் பலர் அஞ்சுகிறோம். குறிப்பாக நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. அதிகரித்து வரும் வெயிலுக்கு மத்தியில், மக்கள் பல்வேறு உடல் நல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

கடுமையான வெப்பத்தால், தலைச்சுற்றல், பலவீனம், மயக்கம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வெப்ப அலைக்கு மத்தியில், உங்கள் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். அதீத வெப்பம் காரணமாக, கண்களில் அசௌகரியம் உணரப்படலாம்.

கண்களில் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் அரிப்பு போன்றவை வெப்பத்தால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். இதை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்களின் உதவியை நீங்கள் நாடலாம். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கண் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான சில டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Pink Eye Infection : பிங்க் ஐ தொற்று கேள்விப்பட்டதுண்டா? அறிகுறிகள் எப்படி இருக்கும்? வராமல் தடுப்பது எப்படி?

வெப்பத்தால் கண் எரிச்சல் மற்றும் நீர் வடிதல் பிரச்சினை நீங்க

வெயில் காலத்தில் வெளியே செல்லும் போதும், வெளியிலில் இருந்து வந்த பிறகும் கண்களை சுத்தமான தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். இது தவிர, வெளியே செல்லும் போது சன்கிளாஸ் அணியுங்கள்.

கண்களில் ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியை பராமரிக்க, அவ்வப்போது ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.

கோடையில் கண் எரிச்சலைத் தவிர்க்க, உடலை நீர்ச்சத்துடன் வைக்க வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். மேலும், உங்கள் உணவில் தேங்காய் தண்ணீர் மற்றும் மோர் போன்ற குளிர் பானங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கண்களில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டாலோ அல்லது கண்களில் உஷ்ணம் ஏற்பட்டாலோ அதனை நீக்க ஐஸ் கட்டிகளை மென்மையான துணியில் எடுத்து மூடிய கண்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும்.

இந்த பதிவும் உதவலாம் : Eye Flu: அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிவோம் வாருங்கள்

உங்கள் கைகளால் உங்கள் முகத்தையும் கண்களையும் மீண்டும் மீண்டும் தொடாதீர்கள். இதுவும் கண் எரிச்சலை ஏற்படுத்தும்.

கோடையில் கண் எரிச்சல் குறைய, பச்சை வெள்ளரிக்காயை நறுக்கி, சிறிது நேரம் கண்களில் வைக்கவும்.

நீரேற்றம் மற்றும் குளிரூட்டும் பண்புகள் இதில் காணப்படுகின்றன.

கண்களில் நீர் வடிகிறது என்றால், துணியால் கண்களை சுத்தம் செய்யாதீர்கள். ஈரமான துணியால் அதை சுத்தம் செய்யவும். மீண்டும் மீண்டும் கண்களை துணியால் துடைப்பதும் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Kan Imai Veekam: கண் இமை வீக்கம் ஏற்பட இதெல்லாம் காரணமாம்!

வலுவான சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக, மதியம் 12-3 மணிக்குள் வலுவான சூரிய ஒளியில் படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Heat Rashes Remedies: கோடையில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க இந்த ஐந்து பொருள்களை மட்டும் யூஸ் பண்ணுங்க

Disclaimer