Herbal teas that should avoid for diabetes: இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்றாக நீரிழிவு நோயும் அடங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக அமைவது உணவுமுறையே ஆகும். ஏனெனில், அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நாள்பட்ட நீரிழிவு நோயை சந்திக்கின்றனர்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உணவுமுறையில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியமாகும். அவ்வாறு நீரிழிவு நோயாளிகள் சில மூலிகை டீ வகைகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக மூலிகை டீ வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனினும், சில மூலிகை தேநீர் வகைகள் மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது. மேலும், இது ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இந்த வகை மூலிகை டீக்களைத் தவிர்த்து வேலை செய்யும் முறையைக் கண்டுபிடிக்கலாம். இதில் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில மூலிகை டீ வகைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bread Good For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பிரவுன் பிரெட் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய மூலிகை டீக்கள்
கெமோமில் டீ
கெமோமில் என்பது காஃபின் இல்லாத மூலிகை தேநீர் வகையைக் குறிப்பதாகும். இது தூக்கத்தை ஒழுங்குபடுத்துதல், செரிமானம் மற்றும் மன ஆரோக்கியம் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது போன்ற பல்வேறு நன்மைகள் கெமோமில் டீ-யில் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது அல்ல. ஏனெனில், இது சில நீரிழிவு மருந்துகளுடன் ஆபத்தான முறையில் தொடர்பு கொள்கிறது. இதனால், இரத்தம் மெலிதாகி இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். எனினும், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு கெமோமில் டீயை அருந்தலாம் எனக் கூறப்படுகிறது.
வெந்தய டீ
வெந்தய விதைகள் நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான சிறந்த மூலிகை மருந்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கொலஸ்ட்ரால், இரத்த குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை மேம்படுத்த உதவுகிறது. எனினும், இந்த தேநீர் அனைவருக்கும் பாதுகாப்பு என்று கூற முடியாது. வெந்தயம் இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவைக் கொண்டிருப்பதாகும். எனவே இதை எடுத்துக் கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இந்நிலையில் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் வெந்தய விதைகள் தொடர்பு கொள்கிறது. இதனால், இதய பிரச்சனைகளுக்கும் பிரச்சனை ஏற்படலாம்.
கற்றாழை தேநீர்
கற்றாழை ஒரு பிரபலமான மூலிகை தாவரமாகும். இது சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகும். எனினும், இதை ஒரு தேநீராகவும் பெறலாம். ஆனால் இது நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பானமாகும். ஏனெனில், கற்றாழை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவுகளில் உயிருக்கு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தலாம். தனிப்பட்ட நோயாளிகளின் மருந்து உட்கொள்ளலுக்கு கற்றாழை தேநீர் இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Medication: சர்க்கரை அளவு சரியாக இருக்கும் போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தலாமா?
நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?
நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான உடற்பயிற்சியின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
பழங்கள் உட்கொள்ளுதல்
உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், சர்க்கரையை சிறப்பாக நிர்வகிக்கவும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதை ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதத்துடன் இணைத்து உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
காய்கறிகளைச் சேர்ப்பது
குறைந்த கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த காய்கறிகள் போன்றவை நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவுகளாகும். இதில் பெரும்பாலானவை நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் இது திருப்தியை அளிக்கிறது.
அதிக நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துகிறது. எனவே நிலையை சீராக்க உணவு மற்றும் சிற்றுண்டியில் நார்ச்சத்து நிறைந்த உணவைச் சேர்க்க வேண்டும்.
இந்த வகை மூலிகை தேநீர் வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சில ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Diet: சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ள 10 உணவுகள்!
Image Source: Freepik