Fri Sep 11, 2026 | 10:47 PM IST

குழந்தைகள் ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகள செஞ்சிக்கொடுங்க... வேண்டான்னு சொல்ல மாட்டாங்க!

குழந்தைகளுக்கான உணவில் என்னவெல்லாம் இருந்தால் அது ஊட்டமாக இருக்கும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த சில ரெபிசிகள் உங்களுக்காக...  

சத்துமாவு கஞ்சி

கஞ்சி தயாரிப்பது பற்றி சொல்லும் முன்பு, அதற்கான சத்து மாவு தயாரிப்பது பற்றி பார்த்து விடுவோம்.

தேவையானவை:

புழுங்கலரிசி - 100 கிராம்
புட்டரிசி - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம்
பாசிப்பயறு - 100 கிராம்
கொள்ளு - 50 கிராம்
ராகி - 200 கிராம்
கம்பு - 100 கிராம்
வெள்ளை சோளம் - 100 கிராம்
மக்காச்சோளம் - 100 கிராம்
வெள்ளை சோயா - 100 கிராம்
பார்லி - 100 கிராம்
பாதாம் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
சம்பா கோதுமை - 200 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்

செய்முறை:

  • அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய் தவிர்த்து, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவையுங்கள்.
  • இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி வைத்துவிடுங்கள்.
  • அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் பிரித்தால், தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும். அன்று முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள்.
  • நன்கு காய்ந்ததும், அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி, பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள்.
  • பார்லியை வறுக்க வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • சத்துமாவு கஞ்சிக்கு, இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

பயன் : குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து சத்துக்களும் நிறைந்த முழுமையான உணவு இது. காலை உணவு சாப்பிட முடியாத அவசரத்தில் இதை ஒரு கப் குடித்தால் போதும்.

தானிய லட்டு :

தேவையானவை:

சத்து மாவு- 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
நெய் -தேவைக்கு

செய்முறை:

  • பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல், சலித்துக் கொள்ளுங்கள். இதை, சத்துமாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • நெய்யை சற்று சூடாக்கி, மாவு மற்றும் சர்க்கரைக் கலவையில், சிறிது சிறிதாக ஊற்றி, கலந்துகொண்டே இருங்கள்.
  • மாவை உருண்டை பிடித்துப் பார்த்தால், உதிராமல் இருக்க வேண்டும். அதுதான் சரியான பக்குவம்.
  • அந்தப் பக்குவம் வந்ததும், நெய் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். இப்போது குழந்தைகளுக்கு பிடிக்கும் தானிய லட்டு தயார்.

பயன்:


சுவையான இந்த தானிய லட்டில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிரம்பியிருப்பதால், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது.

சிறுதானிய தோசை:

  • கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 தேக்கரண்டி அளவுக்குச் சேர்க்கவும்.
  • இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
  • இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.

பலன்கள்:

  • கேழ்வரகு, கம்பும் ரத்தத்தில் உள்ள இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  • குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு.
  • கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெல்லம் / கருப்பட்டியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  • சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

தினை இனிப்புப் பொங்கல்:

தேவையானவை:

தினை அரிசி – 100 கிராம்
பாசிப்பருப்பு – 30 கிராம்
வெல்லம் – 200 கிராம்
நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் – சிறிதளவு
தண்ணீர் – 3 கிண்ணம்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

  • தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியே வறுத்து, நன்றாக ஊறவைக்கவும்.
  • அடி, கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, பாகு காய்ச்சவும்.
  • ஊறவைத்த தினை மற்றும் பருப்பை, தண்ணீரில் நன்றாக வேகவைக்கவும். வெந்தவுடன் அதில் வெல்லப்பாகை ஊற்றவும்.
  • பொங்கல் பதம் வந்தவுடன், ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, ஏலக்காயைப் பொடித்து, பொங்கலில் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:


குளிர்ச்சித் தன்மையை அளிக்கும் உணவு இது. புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சீக்கிரத்தில் செரிமானம் ஆகும். இரும்பு சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறும்.

Read Next

Diabetes in Children: குழந்தைகளுக்கு நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content