30 வயதிலிருந்தே பெண்கள் தங்கள் உடலை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உங்கள் வயது 30-40க்குள் இருந்தால் சில முக்கியமான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் நேரத்திற்கு சாப்பிடவைத்து, தூங்க வைத்து, ஒய்வளித்து பார்த்துக்கொள்வதை பெண்கள் தங்களது கடமையாக கருதுகிறார்கள். ஆனால் பெண்களில் பலர் மதியம் மற்றும் இரவு நேரங்களில் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை.
முக்கிய கட்டுரைகள்
இது செரிமானத்தை பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவு உடல் நலத்திற்கு உதவுகிறது. நீங்கள் நன்றாக சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும், ஆனால் பெண்களுக்கு சரியாக சாப்பிட நேரம் கிடைக்காததால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதே கிடையாது. குடும்பம், அலுவலகம் என இரட்டை குதிரையில் புத்திசாலித்தனமாக பயணிக்கும் அவர்கள், தங்களுடைய உடல் நலம் என்று வரும்போது மட்டும், நேரமின்மையை காரணம் காட்டுகின்றனர்.
உடற்பயிற்சியின்மை, சரியாக சாப்பிடதாது, நீண்ட நேர வேலை, அதிக பொறுப்புகள் போன்ற காரணங்களால் 30 வயதைக் கடந்த பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல ஆரோக்கிய கோளாறுகளை சந்திக்க வேண்டியுள்ளது.
அதிலும் குறிப்பிட்டு செல்ல வேண்டும் என்றால், பெண்கள் உடல் நல பரிசோதனைகளில் கவனம் செலுத்துவது கிடையாது. எப்படி 30 வயதைக் கடந்த பிறகு பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகம்.
எனவே 30 வயதைத் தொட்ட பெண்கள் என்னென்ன மாதிரியான உடல் நல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மார்பக புற்றுநோய் ஸ்கிரீனிங்:
30 வயதிற்குப் பிறகு, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்கள் வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் மார்பில் கட்டி இருக்கிறதா? மார்பக வெளியேற்றம்? தோல் நிறம் மாறிவிட்டதா? இதை சரிபார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோயை பரிசோதிக்க பெண்களுக்கு மேமோகிராபி செய்ய வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை:
கருப்பை புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பேப் ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இரத்த அழுத்த சோதனை:
பெண்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். கூடுதலாக, உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள் தங்களைத் தாங்களே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
எலும்பு பரிசோதனை:
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். எலும்புகள் கட்டமைப்பு சட்டத்தை உருவாக்குகின்றன, எனவே உடலின் சரியான செயல்பாட்டிற்கு வலுவாக இருக்க வேண்டும்.
நீரிழிவு பரிசோதனை:
35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இரத்த குளுக்கோஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பெண் பருமனாக இருந்தால் அல்லது குடும்பத்தில் யாராவது ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், முன்கூட்டியே பரிசோதனை செய்வது அவசியம்.
தைராய்டு:
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கொஞ்சம் கவனித்தல் மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் தைராய்டு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் இருப்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் அவ்வப்போது தகுந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி சோதனை:
இந்த சோதனை உங்கள் இரத்தத்தில் வைட்டமின் டி அளவை அளவிடுகிறது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க வைட்டமின் டி முக்கியமானது.
தலசீமியா பரிசோதனை:
தலசீமியா மற்றும் பிற ஹீமோகுளோபினோபதிகள் மற்றும் பால்வினை நோய்கள் போன்ற இரத்த சம்பந்தமான கோளாறுகளுக்கு இரத்த பரிசோதனை தேவைப்படுகிறது.
Image Source: Freepik