உஷார் மக்களே! அதிகரிக்கும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க மருத்துவர் சொன்ன இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Easy daily habits to lower cancer risk in young adults: இன்றைய காலத்தில் குடும்ப வரலாற்றைத் தவிர வேறு காரணிகளும் புற்றுநோய் அபாயத்தை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, இதில் இளைஞர்களே அதிகம் பாதிப்படைகின்றனர். இதில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உஷார் மக்களே! அதிகரிக்கும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க மருத்துவர் சொன்ன இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க


Doctor shares simple habits to reduce cancer risk in young adults: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் எடையிழப்பு, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வரிசையில் புற்றுநோயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பல்வேறு வகை புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் புதிய புற்றுநோய் நோயாளிகளும் 9.7 மில்லியன் இறப்புகளும் பதிவாகியுள்ளது. 5 பேரில் 1 பேர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் தோராயமாக 9 ஆண்களில் 1 பேரும் 12 பெண்களில் 1 பேரும் இந்த நோயால் மரணமடையும் நிலை ஏற்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், 20, 30 மற்றும் 40 வயதுடையவர்கள் உள்ளிட்ட இளைஞர்களிடையே புற்றுநோய் நோயறிதல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. நாள்பட்ட மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை, அதிக புகையிலை பயன்பாடு மற்றும் நச்சுப் பொருட்களுக்கு ஆளாகுதல் போன்றவை மரபணுவுக்கு அப்பாற்பட்ட சில காரணிகளாகும். குறிப்பாக, இளம் மக்களில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கேன்சர் நோயாளிகள் மழைக்கால தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதை செய்யவும்..

நிபுணரின் கருத்து

இது குறித்து, முன்னணி இருதயநோய் நிபுணரான டாக்டர் அலோக் சோப்ரா அவர்கள் புற்றுநோய் நோயாளிகளின் ஆபத்தான அதிகரிப்பை எடுத்துக்காட்டும் தரவுகளைக் குறிப்பிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி, “புற்றுநோய் வருவதற்கு மிகவும் இளமையாக இருப்பவர்களிடமே நாம் காண்கிறோம். ஏன் என்று யாரும் கேட்பதில்லை. 30 மற்றும் 40 வயதுடைய நோயாளிகளை, 20 மற்றும் டீன் ஏஜ் வயதுடையவர்களிடத்திலும் கூட, புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவது இப்போது அரிதானதாகும். இதற்கு முன்பு இது போன்றை நிலைமைகள் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்

மருத்துவர் குறிப்பிட்டுள்ளதன்படி, கடந்த சில ஆண்டுகளாக குடும்ப வரலாற்றைத் தவிர வேறு காரணிகளும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் பெரும் பங்களிப்பை அளித்து வருவதாக எடுத்துரைத்துள்ளார்.

மேலும் அவர், “இது உங்கள் மரபணுக்கள் மட்டுமல்ல. 5% முதல் 10% புற்றுநோய்கள் மட்டுமே மரபுவழி பிறழ்வுகளிலிருந்து வருகிறது. அதாவது, 95% வரை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதையும், நமது உணவுமுறை எப்படி இருக்கிறது, நச்சுகள், மன அழுத்தம், மறைக்கப்பட்ட தொற்றுகள் போன்றவற்றுடன் தொடர்புடையது” என்று கூறியுள்ளார்.

“புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் சுமார் 30% முதல் 35% வரை உணவுமுறையுடன் தொடர்புடையவை என்றும், 30% புகையிலை பயன்பாடு காரணமாக இருந்தாலும், 15%-20% நாள்பட்ட தொற்றுகள், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் மற்றும் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் விடப்படும் வைரஸ் சுமை போன்றவற்றிலிருந்தும் வருகிறது” என்று டாக்டர் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது
  • அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல்
  • புகைபிடித்தல்
  • நாள்பட்ட மன அழுத்தம்
  • பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிளாஸ்டிக் வெளிப்பாடு போன்ற சுற்றுச்சூழல் நச்சுகள்

இந்த பதிவும் உதவலாம்: வயிற்றுப் புற்றுநோய் வராமல் பாதுகாக்க நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் இங்கே

புற்றுநோய் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?

அழற்சி எதிர்ப்பு, முழு உணவு உணவுக்கு மாறுவது

பெர்ரி, வெண்ணெய், இலை கீரைகள், நட்ஸ், விதைகள், முழு தானியங்கள் மற்றும் இன்னும் பிற அழற்சி எதிர்ப்பு உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் ஆரோக்கியமான முழு தானியங்களை முக்கியமாக உட்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்வது

ஒரு நாளைக்கு 20-30 நிமிடங்கள் கூட புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என மருத்துவர் குறிப்பிடுகிறார். இது இன்சுலின் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வது உடல் முதல் மன ஆரோக்கியம் வரை ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்க உதவுகிறது.

சூரிய ஒளியைப் பெறுவது

சூரிய ஒளி வைட்டமின் டி-ன் சிறந்த மூலமாக இருந்தாலும், இது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்தவும், இரவில் சிறந்த தூக்கத்தை உறுதி செய்யவும் வழிவகுக்கிறது.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

கட்டுப்பாடற்ற மன அழுத்தம் நாம் நினைத்ததை விட மிகவும் தீங்கு விளைவிக்கும். இது உடலில் ஹார்மோன்களைத் தொந்தரவு செய்து, எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது. மோசமான மன ஆரோக்கியம் உடல் வீக்கத்தை அதிகரித்து, மூளை, இதயத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.

தூக்கத்தை மேம்படுத்துவது

நல்ல தரமான மற்றும் அளவு தூக்கத்தின் மூலம் உடலை ஒரே இரவில் சரிசெய்யவும் குணப்படுத்தவும் முடியும். போதுமான தூக்கம் ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

சுத்தமான காற்றை சுவாசிக்க

காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினையாக இருப்பதால், முடிந்தவரை மாசுபடுத்திகளுக்கு ஆளாகாமல் தடுப்பது மிகவும் முக்கியமாகும். காற்றின் தரம் மோசமாக இருக்கும்போது முகமூடியைப் பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு மூலிகை

உணவில் பாதுகாப்பு மூலிகைகளைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவை உடலுக்குக் கூடுதல் சுகாதார நன்மைகளை வழங்குகிறது.

"புற்றுநோய் இளமையாகத் தோன்றுகிறது. அது துரதிர்ஷ்டம் அல்ல - அது மோசமான வாழ்க்கை முறை. உங்கள் குடும்பத்தில் புற்றுநோய் பரவினால், அது எப்போதும் மரபணு சார்ந்தது அல்ல, நாம் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறைதான் முக்கியம்" என்று மருத்துவர் சோப்ரா குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: இளைஞர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்.. எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே..

Image Source: Freepik

Read Next

டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா.?

Disclaimer