“வயதான காலத்தில் உடற்பயிற்சி தேவையா?” என்ற கேள்விக்கு பதிலாக, 70 வயது பாட்டி ஒருவர் எடைகளைத் தூக்கி, மூட்டுவலியை வென்றுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
68 வயதில் மூட்டுவலியால் சரியாக நடக்க முடியாமல் தவித்த ரோஷ்ணி தேவி, மகனின் ஊக்கத்தால் ஜிம்மில் காலடி எடுத்து வைத்தார். இன்று, அவர் தினமும் 60 கிலோ டெட்லிஃப்ட், 40 கிலோ ஸ்குவாட், 100 கிலோ லெக் பிரஸ் செய்து வருகிறார். மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, முழங்கால் வலி முழுமையாக குறைந்ததோடு, அவர் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்.
இந்த அசத்தல் பயணத்தை Social Media Influencer ஆராதனா சட்டர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்ட நிலையில், பிரபல எலும்பியல் நிபுணர் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Reaction Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: 60 வயதிலும் ஃபிட்டா மாஸ் காட்டனுமா? உங்க உணவு தேர்வு இப்படி இருக்கணும்.!
ரோஷ்ணி தேவியின் நோக்கம்
இன்ஃப்ளூயன்சர் ஆராதனா பதிவிட்ட வீடியோவில், “இந்தியாவின் வலிமையான பெண்மணியாக மாறுவதே என் இலக்கு” என்று ரோஷ்ணி பாட்டி தனது கனவைப் பற்றி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
"70 வயதில் எடைத்தூக்கலாமா?" – டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம்
டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தனது பதிவில், ““வயது எதுவாக இருந்தாலும், தசைகள் உடற்பயிற்சிக்கு பதிலளிக்கும். எடைத்தூக்கும் பழக்கம் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. தசை வலிமை அதிகரிக்கும்போது, மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது. இதன் மூலம் மூட்டுவலி குறையும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “மூட்டுகள் மோசமான நிலையில் இருந்தால், ஆரம்பத்தில் சிறிய வலி இருக்கலாம். ஆனால் மருத்துவ சிகிச்சை மற்றும் சரியான உடற்பயிற்சியுடன், தசை நிறை மற்றும் எலும்பு அடர்த்தி அதிகரிக்க முடியும். இயக்கமும் வலிமையும் தான் ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படை” என்றார்.
இறுதிச் சொல்லாக, “சரி, இன்றே உங்க அம்மா அப்பாவை எடை தூக்க ஊக்குவிக்க ஆரம்பியுங்கள்!” என்று டாக்டர் சந்தோஷ் தனது பதிவை முடித்தார்.
View this post on Instagram
இறுதியாக..
ரோஷ்ணி தேவியின் கதை, “வயது என்பது வெறும் எண்” என்பதற்கான உதாரணமாகும். டாக்டர் சந்தோஷ் ஜேக்கப்பின் விளக்கம், மூட்டுவலியால் தவிப்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது. வயதான காலத்திலும் உடற்பயிற்சி சரியான முறையில் மேற்கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும் என்பது தெளிவாகிறது.