
நம் அன்றாட வாழ்வில் நம்மில் பெரும்பாலானோர் மூக்கடைப்பு பிரச்சனைகளைச் சந்திக்கின்றோம். அதிலும் குறிப்பாக, படுத்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது, நாம் உட்கார்ந்திருக்கும்போது அல்லது நிற்கும்போது, ஈர்ப்பு விசையானது மூக்கில் உள்ள சளி மற்றும் திரவங்களை எளிதில் வெளியேற்ற அனுமதிக்கிறது. ஆனால், அதே சமயம், நாம் படுத்துக் கொள்ளும்போது, இந்த வடிகால் செயல்முறை மெதுவாகி, மூக்கில் சளி குவிந்து, நெரிசலை ஏற்படுத்துகிறது.
முக்கியமான குறிப்புகள்:-
இதற்கு மற்றொரு காரணமாக, நாம் படுத்துக் கொள்ளும்போது தலை மற்றும் மூக்கிற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால், மூக்கின் உள்ளே காணப்படக்கூடிய இரத்த நாளங்கள் வீங்குகின்றன. இது மூக்கு வீக்கம் மற்றும் அடைப்புக்கு வழிவகுக்கிறது. இதில் நாம் படுத்துக் கொள்ளும்போது மூக்கு நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளையும் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணரான, காது, தொண்டை (ENT) ஆலோசகர், டாக்டர் மனுஸ்ருத் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: மூக்கை சுத்தம் செய்ய உப்பு நீர் – நாசல் சேலைன் வாஷ் செய்வது எப்படி? மருத்துவர்கள் கூறும் பாதுகாப்பான வழிகள்!
படுத்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
பொதுவாக, ஒருவருக்கு சைனஸ் தொற்று, ஒவ்வாமை நாசியழற்சி அல்லது மூக்கின் செப்டம் விலகல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இந்தப் பிரச்சனை அதிகரிக்கும் என்று டாக்டர் மனுஸ்ருத் விளக்கினார். உதாரணமாக, ஒவ்வாமையானது மூக்கின் உட்புறப் புறணி வீக்கத்தை ஏற்படுத்தி, படுத்துக் கொள்ளும்போது மூக்கு அடைப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், சைனஸ் தொற்று வயிற்றில் சளி சேர அனுமதிப்பதுடன், படுத்துக் கொள்ளும்போது அதை வெளியேற்ற முடியாத நிலையை உண்டாக்கிறது.
மேலும், ஒரு விலகல் செப்டம் குழாயின் ஒரு பக்கத்தை குறுகச் செய்து, காற்றோட்டத்தைத் தடுக்கிறது. இதன் காரணமாகவே, படுத்துக் கொள்ளும்போது இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது என மருத்துவர் கூறினார்.
மற்ற காரணங்கள்
ஒரு பக்கம் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான மற்ற சில காரணங்களையும் காணலாம்.
- பொதுவாக சளி, இருமல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும் மூக்கில் அடைப்பு ஏற்படலாம். மேலும் சில சமயங்களில் குளிர்ச்சி காரணமாக ஒரு மூக்கு மட்டுமே பாதிக்கப்படும் அபாயம் உண்டாகலாம்.
- இது தவிர நாசி குழியில் வீக்கம் இருக்கும்போது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி உருவாகத் தொடங்குகிறது. இந்த பிரச்சனையுடன் சுவாசிப்பதில் சிரமமும் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Home Remedies For Blocked Nose:மூக்கடைப்பா?… இந்த எளிய வீட்டு வைத்தியங்கள பாலோப் பண்ணுங்க!
மூக்கு அடைப்பிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி?
- உங்கள் தலைக்குக் கீழே ஒரு கூடுதல் தலையணையுடன் படுத்துக் கொள்ள வேண்டும்.
- இதிலிருந்து சளி எளிதில் வெளியேறி மூக்கு சவ்வில் ஏற்படும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.
- டாக்டர் மனுஸ்ருத் அவர்கள், உப்பு நாசி ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவதால் மூக்கு ஈரப்பதமாக இருக்கும், மேலும் சளி எளிதில் வெளியேறும் என்று கூறுகிறார்.
- மேலும், நீண்ட கால நிவாரணத்திற்கு, ஒவ்வாமைகளைத் தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சைனஸ் அல்லது ஒவ்வாமை பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
- மூக்கு அடைப்பு அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது தூக்கத்தில் குறுக்கிட்டாலோ, ஒரு ENT நிபுணரை அணுக வேண்டும். மேலும், அவர்கள் ஏதேனும் அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் மருந்து அல்லது அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.
முடிவுரை
படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் விரிவடைந்த இரத்த நாளங்கள் ஆகும். எனவே, சரியான பராமரிப்பு, ஒவ்வாமை கட்டுப்பாடு மற்றும் தூங்கும் நிலையில் சில மாற்றங்கள் மூலம், பெரும்பாலான மக்கள் இந்த அசௌகரியத்தைக் குறைத்து எளிதாக சுவாசிக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Blocked Nose Remedies: இரவில் மூக்கடைப்பால் அவதியா? உடனே நீங்க இத செய்யுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 16, 2025 23:23 IST
Published By : கௌதமி சுப்ரமணி