Juice For Stress: மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க இந்த ஜூஸ்யை குடியுங்க!

  • SHARE
  • FOLLOW
Juice For Stress: மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க இந்த ஜூஸ்யை குடியுங்க!


நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்பினால், முதலில் உங்கள் வாழ்க்கையில் இருந்து மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மன அழுத்தம், பதட்டம், கோபம் மற்றும் மனச்சோர்வு ஏற்பட்டால், உங்கள் உடலுக்கு உதவி தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில், குடல் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற புகார்கள் ஏற்படலாம். இந்நிலையில், குடலை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கேரட், செலரி மற்றும் இஞ்சி சாறு மன அழுத்தத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. இவற்றை எவ்வாறு சாப்பிட வேண்டும், இதன் நன்மைகள் என்ன என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கும் ஜூஸ் செய்முறை:

இந்த ஜூஸ் தயாரிக்க, செலரி இலை, இஞ்சி, கேரட் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், எல்லாவற்றையும் நன்றாக அரைத்து சாறை மட்டும் வடிகட்டி எடுக்கவும். பின்னர், இதில் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இதில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை, மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • இந்த சாற்றில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும்.
  • இந்த சாறு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள தாதுக்கள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

  • செலரி மற்றும் இஞ்சியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் கேரட்டில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.
  • ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த ஜூஸை குடிப்பதால் உங்கள் சருமம் மேம்படும்.
  • இப்போதெல்லாம் பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் கேரட், செலரி மற்றும் இஞ்சி ஜூஸ் குடித்தால் மிகவும் நல்லது. இதை குடிப்பதால் சோர்வு நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும்.
  • இந்த சாறு இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதே போல, இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
    இந்த ஜூஸை குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Betel Leaves: வெற்றிலையை இப்படி சாப்பிட்டால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்!

Disclaimer