இரவில் ஜீராவுடன் இந்த பொருள்களை சேர்த்த தண்ணீரைக் குடிப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

Can i drink ajwain and jeera water at night: சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், ஓமம் மற்றும் வெந்தய விதைகள் இவை அனைத்தும் கலந்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்குப் பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. இதில் இந்த ஐந்து பொருள்களைச் சேர்த்த நீரை இரவில் குடிப்பதால் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இரவில் ஜீராவுடன் இந்த பொருள்களை சேர்த்த தண்ணீரைக் குடிப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?


What happens if we drink fenugreek and jeera water daily: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன், சில ஆரோக்கியமான பானங்களையும் எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருள்களாகவும், நம்மில் பெரும்பாலானோரின் உணவில் ஒரு முக்கிய பகுதியாக அமையக்கூடிய பொருள்களாக ஜீரா, கொத்தமல்லி, செலரி, பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய விதைகள் போன்றவை உள்ளது. இவை அனைத்துமே நம் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தக்கூடியதாகும். இந்த மசாலாப் பொருட்கள் அனைத்தும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவையாகும்.

மேலும், இவை பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் அவற்றைத் தனித்தனியாக நேரடியாகவோ அல்லது வேறு சில உணவு வழிகளிலோ எடுத்துக் கொள்கிறோம். இவற்றை எப்படி உட்கொண்டாலும் உடலுக்கு நன்மைகளைத் தருவதாகவே அமைகிறது. அதிலும் குறிப்பாக, இந்த மசாலாப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஜீரா, பெருஞ்சீரகம், ஓமம், கொத்தமல்லி மற்றும் வெந்தய விதைகளை ஒன்றாக உட்கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடியதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Warm jeera water: சீரக தண்ணீர் நல்லது தான்! ஆனா அத இப்படி குடிச்சா ரொம்ப நல்லது

எப்போது, எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மத்தியப் பிரதேசம், ஆயுர்வேத மருத்துவ அதிகாரி, ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சோனல் கார்க் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதன்படி, சீரகம், வெந்தய விதைகள், கொத்தமல்லி, செலரி மற்றும் பெருஞ்சீரகம் இவற்றை அரைத்து, இந்தப் பொடியை தண்ணீரில் தண்ணீரில் கொதிக்க வைத்து அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கான எளிதான வழியாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உட்கொள்வது, பல அற்புதமான நன்மைகளைத் தருவதாகக் கூறியுள்ளார். இதில் சீரகம், கொத்தமல்லி, செலரி, பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய விதைகளைப் பொடி செய்து இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

image

benefits-of-drinking-cumin-coriander-ajwain-fennel-fenugreek-water-at-night-what-doctor-says-Main-1748579215007.jpg

சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், செலரி மற்றும் வெந்தய பொடியை இரவில் தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எடை இழப்பை ஆதரிக்க

உடல் எடையை இழக்க விரும்புவோர்க்கு இந்த பானம் ஒரு சிறந்த எடை இழப்பு பானமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், இதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருள்கள் கலோரிகளை வேகமாக எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிப்பதில் இந்த பானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க

ஜீரா, கொத்தமல்லி, ஓமம், பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய விதைகளை அரைத்து தயாரித்த பொடி கலந்த நீரைக் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது அவற்றில் HbA1c ஐக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த பானம் மிகவும் நன்மை பயக்கும்.

காலையில் வயிறு சுத்தமாக இல்லாத பிரச்சனையை தீர்க்க

காலையில் சரியான குடல் இயக்கம் இல்லாத பிரச்சனை இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாக அமைகிறது. ஆனால், இந்த மசாலாப் பொருள்கள் கலந்த பொடியைச் சேர்த்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இது செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலை மஞ்சளுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

நச்சுகளை நீக்குவதற்கு

இந்த மசாலாப் பொருள்கள் கலந்த பானம் ஒரு சிறந்த நச்சு நீக்க பானமாக செயல்படுகிறது. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதில் மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இந்த பானம் இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

செரிமானத்தை சீராக வைப்பதற்கு

நம்மில் பெரும்பாலோர் இரவில் தாமதமாக சாப்பிடுவதால், செரிமான ஆரோக்கியம் பலவீனமடைகிறது. இதனால், உணவு சரியாக ஜீரணமாகாமல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனினும், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியைக் கலந்து உட்கொள்வது உணவை எளிதாக செரிமானம் அடைய வைப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகத் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்.? ஆயுர்வேத நிபுணரிடம் இருந்து அறிவோம்..

Image Source: Freepik

Read Next

விராட் கோலி போல் நாள் முழுவதும் சுறுசறுப்பாக இருக்க காலை இதை மட்டும் சாப்பிடுங்க!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version