$
சரியான நேரத்தில் உணவு உண்பது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும். மேலும் உணவைத் தவிர்க்க வேண்டாம்.
ஆனால் பலர் நேரத்தை மனதில் கொள்ளாமல் உணவு உண்கின்றனர். சிலர் மாலை 4 முதல் 6 மணிக்குள் சிற்றுண்டி அல்லது உணவை எடுத்துக்கொள்கிறார்கள். இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இது செரிமான அமைப்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் மற்றும் சில சமயங்களில் வளர்சிதை மாற்ற செயல்முறையும் தொந்தரவு செய்யலாம். மாலை 4 முதல் 6 மணி வரை ஏன் உணவு உண்ணக் கூடாது என்பதை இங்கே காண்போம்.

மாலை 4 முதல் 6 மணி வரை ஏன் உணவு உண்ணக்கூடாது?
மாலை 4 முதல் 6 மணிக்குள் உணவு சாப்பிடுவது உணவின் சமநிலையை கெடுக்கும். உண்மையில், காலையில் எழுந்த பிறகு, 7 முதல் 8 மணிநேரம் வரை நீங்கள் உற்சாகமாகவும், உந்துதலுடனும் இருப்பீர்கள். இந்த நேரத்தில் செரிமானம் துரிதமாக செயல்படும், ஆனால் மாலையில் அப்படி இல்லை. சோர்வாக உணர்வீர்கள்.
இந்த நேரத்தில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இந்த நேரத்தில் மக்கள் பொதுவாக வடை, பர்கர், டீ, காபி, பிஸ்கட் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மாலை 4 முதல் 6 மணி வரை ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.
மாலை 4 முதல் 6 மணி வரை என்ன சாப்பிட வேண்டும்?
மாலை 4 மணி முதல் 6 மணி வரை பசி எடுத்தால், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதற்கு பதிலாக, சில ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கனமான உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் மாலை 3:30 மணிக்கு எலுமிச்சை தண்ணீர் மற்றும் மோர் குடிக்கலாம். இதனால் பசி குறைவாக இருக்கும். உங்களுக்கு உணவின் மீது அதிக ஆசை இருந்தால், கையளவு நட்ஸ் சாப்பிடுங்கள். இதைத் தவிர பிளாக் காபி, ப்ளாக் டீ எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் புரோட்டீன் ஷேக்கும் எடுத்துக் கொள்ளலாம்.

4 முதல் 6 மணி வரை சாப்பிட்டால் என்ன ஆகும்?
மாலை 4 முதல் 6 மணிக்குள் உணவு உண்பதால் உங்கள் உடலில் உள்ள கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. இது உடல் பருமன் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் நீரிழிவு, தைராய்டு அல்லது இதயம் தொடர்பான சில நோய்களுக்கும் பலியாகலாம்.
Image Source: Freepik