Skin Glowing Tips: எந்தெந்த பூக்களை பயன்படுத்தினால் முகம் டபுள் பொலிவு பெறும்!

  • SHARE
  • FOLLOW
Skin Glowing Tips: எந்தெந்த பூக்களை பயன்படுத்தினால் முகம் டபுள் பொலிவு பெறும்!

முகத்தை பராமரிக்க பூக்களை எப்படி பயன்படுத்துவது?

முகத்தை பராமரிக்க பல்வேறு க்ரீம்களை ஆன்லைனிலும், கடையிலும் வாங்கி அப்ளை செய்து அதற்கான பலன் கிடைக்காமல் அவதிப்படுகிறீர்களா?. இனி கவலை வேண்டாம். இயற்கையான பூக்களை முகத்திற்கு சரியாக பயன்படுத்தினால் முகம் டபுள் பொலிவு பெறும். பூக்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஸ் பேக் செய்து அப்ளை செய்வதன் மூலம் சருமம் பிரச்சனை குறைந்து முகம் பொலிவு பெறும். அழகு அதிகரிக்க விலையுயர்ந்த க்ரீம்களை விட எளிதில் கிடைக்கும் இயற்கையான பூக்களை முகத்திற்கு பயன்படுத்தினால் அழகு இரட்டிப்பாகும்.

இதையும் படிங்க: ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

ரோஜா பூ

பெரும்பாலானோர் தோட்டத்திலும் கடையில் எளிதிலும் கிடைக்கக் கூடிய பூக்கள் ரோஜா. இந்த ரோஜா பூ அழகை பராமரிக்க பெருமளவு உதவும். கண்களுக்குக் கீழே உள்ள கருமையை நீக்க ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. பருத்தியை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களை சுற்றி தடவினால் நல்ல பலன் கிடைக்கும். ரோஜாவின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது தோலில் உள்ள அரிப்பு, வீக்கம் போன்றவற்றையும் நீக்குகிறது. ரோஜா ஒரு நல்ல சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது. ரோஸ் வாட்டர் நம் முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

லாவெண்டர் பூ

லாவெண்டர் பூக்கள் தோல் எண்ணெய் மற்றும் pH அளவை சமன் செய்கிறது. இது சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். லாவெண்டர் பேஸ் மாஸ்க்.. தொற்றுகளை குணப்படுத்துகிறது. இந்த பூவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. லாவெண்டர் எண்ணெய் சருமத்தை பளபளப்பாக்குகிறது. லாவெண்டர் எண்ணெயை முகத்தில் தடவுவது நல்லது. இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குகிறது. முகப்பரு வராமல் தடுக்கிறது.

சாமந்தி

சாமந்தியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. தோல் எரிச்சலில் இருந்து பாதுகாக்கிறது. இந்த பூக்களை உலர்த்தி பொடி செய்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

செம்பருத்தி

இந்த பூவில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இரண்டு ஸ்பூன் செம்பருத்தி இதழ்கள், ஒரு ஸ்பூன் கற்றாழை கூழ், அரை ஸ்பூன் முல்தானி மண் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகம், கழுத்து மற்றும் கைகளில் பேக் போடவும். அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். இந்தப் பூக்கள் சருமத்தை முதுமையில் இருந்து பாதுகாத்து, என்றும் இளமையாக காட்சியளிக்க உதவுகிறது.

மல்லிகைப் பூ

மணம் வீசும் மல்லிகைப் பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மல்லிகைப் பூக்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அவை பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. முகத்தை ஈரப்பதமாக்கி, பொலிவாக்கும் குணம் மல்லிகைக்கு உண்டு. கொத்து மல்லிகையை பேஸ்ட் செய்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

லில்லி பூக்கள்

லில்லி பூக்கள் சருமத்திற்கு தேவையான கொலாஜனை உற்பத்தி செய்கின்றன. இரண்டு ஸ்பூன் லில்லி பூ இதழ்களை ஒரு ஸ்பூன் தேன் மற்றும் பாலுடன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால்… சுருக்கங்கள், புள்ளிகள் குறைந்து முகம் அழகாக இருக்கும்.

இதையும் படிங்க: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

இந்த பூக்கள் முகத்தை பொலிவாக வைக்க பெருமளவு உதவும் என்றாலும் ஏதேனும் பின் விளைவை சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!

Disclaimer

குறிச்சொற்கள்