Dark Skin: உங்கள் தோல் கருமையாக மாறுகிறதா? அதற்கான காரணமும், வைத்தியமும் இதோ!

  • SHARE
  • FOLLOW
Dark Skin: உங்கள் தோல் கருமையாக மாறுகிறதா? அதற்கான காரணமும், வைத்தியமும் இதோ!


Dark Skin: பலரின் சருமமும் பராமரிப்பு செயல்முறையை தொடங்கிய உடன் கருமையாக மாறும். இதற்கான காரணத்தையும், வைத்திய முறையையும் இந்த பதிவை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். பளபளப்பான சருமம் பெற வேண்டும் என்பது பலரின் இலக்காக இருக்கும். இதற்காக பலரும் பலவிதமான செயல்முறையை மேற்கொள்வார்கள்.

இதில் சிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கும், சிலர் சரும பராமரிப்பு செயல்முறையால் பக்கவிளைவுகளிலும் சிக்கி தவிப்பார்கள். தோல் பராமரிப்பு வழக்கத்தைத் தொடங்கிய பின் பலரின் தோல்களும் கருமையாகி விடுகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

இதையும் படிங்க: ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

தோல் கருமையாக மாற காரணங்கள்

தோல் பராமரிப்பு வழக்கத்தைத் தொடங்கிய பிறகு தோல் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

தோல் சுத்திகரிப்பு

தோல் சுத்திகரிப்பு என்பது தற்காலிகமானது. தோல் வெடிப்பு, கருமையாக மாறுதல், சேதமடைதல் போன்ற பல பிரச்சனைகளை பலரும் எதிர்கொள்கின்றனர். ரெட்டினாய்டுகள் அல்லது ஆல்பா ஹைட்ராக்ஸி போன்ற போன்ற நமது சருமப் பராமரிப்பு பொருட்களில் உள்ள மூலங்கள் தோல்களின் செல்களுக்குள் புகுந்து செயல்படுகிறது. இது தோல் கருமை மற்றும் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

சூரிய ஒளி

பெரும்பாலான தோல் பராமரிப்பு பொருட்களும் அதை அப்ளை செய்பவர்களின் சருமத்தை சூரிய ஒளியில் உணரவைக்கும். எனவே, அதிக சூரிய ஒளியில் சருமம் கருமையாகிவிடும். அதீத சூரிய ஒளி சருமத்தை சேதமடைய வைக்கும். தினமும் வெளியே செல்லும் போது போதுமான அளவிலான சன்ஸ்கிரீன் க்ரீம் மட்டும் அப்ளை செய்வது அவசியம்.

அதிகப்படியான பயன்பாடு

சில நேரங்களில் மக்கள் தங்கள் தோல் பராமரிப்பு பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள், இது விரைவான முடிவுகளைத் தரும் என நினைக்கிறார்கள். ஆனால் இது சருமத்தை கருமையாக்க வழிவகுக்கிறது. முகம் சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் அனைத்து தேவையான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

போதுமான நீரேற்றம்

மக்கள் தங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தைத் தொடங்கும்போது நீரேற்றத்தின் முக்கியத்துவத்தை பெறுவது அவசியம். தெளிவான நிறத்தை பராமரிக்க நன்கு நீரேற்றமாக இருப்பது அவசியம், போதுமான அளவு நீர், நீராகாரம், பழச்சாறுகள் உள்ளிட்டவைகளை குடிக்க வேண்டும்.

பொருட்கள் ஒவ்வாமை

சில சமயங்களில், புதிய தோல் பராமரிப்புப் பொருட்கள் உங்கள் சருமம் உணர்திறன் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தோல் சிவத்தல், எரிச்சல் அல்லது கருமையாக கூட வழிவகுக்கும். எனவே, எந்தவொரு தோல் பராமரிப்புப் பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.

தோல் கருமையாவதை தவிர்ப்பது எப்படி?

சருமப் பராமரிப்பைத் தொடங்கிய பிறகு உங்கள் சருமம் கருமையாக இருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய சில தீர்வுகளை பார்க்கலாம்.

பொறுமை அவசியம்

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் ஆரம்பித்தவுடன் உறுதியாக இருக்க வேண்டும். அதேபோல் பொறுமையாக இருக்க வேண்டும். எந்தவொரு விஷயமும் உடனே பலனை எதிர்பார்த்தால் அது நிரந்தரமாக இருக்காது. எனவே பொறுமையாகவும் சரியான அளவும் செயல்முறைகளை செய்ய வேண்டும். தோல் சுத்திகரிப்பு என்பது இயற்கையான மற்றும் தற்காலிக செயல்முறையாகும்.

சூரிய பாதுகாப்பு

சன்ஸ்கிரீன் என்பது எந்தவொரு தோல் பராமரிப்பு செயல்முறைக்கும் அவசியம். உங்கள் தோல் பராமரிப்பு செயல்முறையில் எப்போதும் சன்ஸ்க்ரீனை எடுத்துக் கொள்ளுங்கள். இது மேலும் தோல் கருமையாவதைத் தடுக்க உதவும்.

இதையும் படிங்க: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

தோல் மருத்துவரை அணுகவும்

தோல் பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. தோல் உடலில் மிகவும் மிருதுவான ஒன்று. இதை சரியாக கையாள வேண்டும், உங்கள் தோல் கருமையாவதையோ அல்லது வேறு ஏதேனும் தீவிரத்தையோ சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது,.

Image Source: Freepik

Read Next

Skin Care Cleanser: மென்மையான சருமத்தை பெற வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க, நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்