How to Use Tulsi: ஆயுர்வேத முறைப்படி துளசியை எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
How to Use Tulsi: ஆயுர்வேத முறைப்படி துளசியை எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?


Tulsi Benefits: இந்தியாவைப் பொறுத்தவரை துளசி புனிதமான செடியாக கருதப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலான வீடுகளில் துளசி வளர்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது, ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய மூலிகை ஆகும். தலைவலி, வயிற்று வலியில் ஆரம்பித்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை துளசி மூலம் நிவாரணம் பெற முடியும்.

துளசியின் அறிவியல் பெயர் அசிமம் டெனுப்ளோரம் (Asimum tenuplorum) என்பதாகும். இது லாமியாசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். துளசியின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் இருந்தே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருவதால்,அதன் தாயகமாக கருதப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் துளசிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி அடாப்டோஜெனிக், ஆக்ஸிஜனேற்ற, நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, இம்யூனோமோடூலேட்டரி விளைவுகளைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Masala Tea: மசாலா டீ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… ஒரு கப்பில் எத்தனை நன்மைகள் பாருங்க!

துளசிக்கு பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன. துளசி எத்தனை வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

துளசி தேநீர்:

தேநீர் தயாரிக்க துளசியின் புதிய இலைகள் அல்லது உலர்ந்த இலைகள் தூள் சூடான நீரில் சேர்க்க வேண்டும். இது மிகவும் புத்துணர்ச்சியூட்டக்கூடிய தேநீராகும்.

ஒரு கப் வெந்நீரில் 1-2 டீஸ்பூன் துளசி இலைகளை சேர்த்து 10-15 நிமிடம் மூடி வைத்து, வடிகட்டி குடிக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மனதிற்கு அமைதியையும் தருகிறது.

துளசி நீர்:

ஒரு ஜாடி தண்ணீரில் சில புதிய துளசி இலைகள் அல்லது துளசி தூள் சேர்த்து இரவு முழுவதும் மூடி வைக்கவும். அந்த நீரை நாள் முழுவதும் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

துளசி இலைகள்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் 2-3 துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். துளசி இலைகளை சமையலில் சுவை சேர்க்க பயன்படுத்தலாம்.

செடியில் இருந்து பறித்த புத்தம் புதிய துளசி இலைகளை காலையில் மென்று சாப்பிடுவது சுவாச பிரச்சனைகளுக்கு உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

துளசி சாறு:

துளசியின் இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகுவது சளி, இருமல்,காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய எளிமையான ஆயுர்வேத மருத்துவ முறையாகும்.

தினமும் துளசி சாப்பிடுவது சவாலாக இருந்தால், காப்ஸ்யூல்கள், எண்ணெய்கள் அல்லது டிங்க்சர்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் துளசி சாறுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்ளலாம்.

துளசி எண்ணெய்:

துளசி எண்ணெய் அரோமாதெரபி மற்றும் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது. நறுமணத்தை உள்ளிழுப்பது அல்லது நீர்த்த துளசி எண்ணெயை சருமத்தில் தடவுவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வை மேம்படுத்தவும் உதவும்.

துளசி பவுடர்:

துளசி அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த துளசி இலைகள் அல்லது துளசி பொடியை தண்ணீர் அல்லது பிற இயற்கை பொருட்களுடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் அல்லது ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ஆயுர்வேத சூத்திரங்கள்:

பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதில் துளசி பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளில் துளசி மற்றும் பிற மருந்துகள் உள்ளன. இந்த மருந்து எந்த வகையான நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, அந்தந்த மூலிகைகள் கொண்டு துளசி தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பான முழுமையான விவரங்களை ஆயுர்வேத நிபுணர்கள் வழங்க முடியும். அதன் கலாச்சார முக்கியத்துவம், மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, துளசி தெற்காசியாவின் பல பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Image Source:Freepik

Read Next

Back Pain Remedies: கர்ப்ப காலத்தில் தீராத முதுகு வலியா? இந்த மூலிகைகளை யூஸ் பண்ணுங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்