தவறியும் பாகற்காய் உடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

  • SHARE
  • FOLLOW
தவறியும் பாகற்காய் உடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!


பாகற்காய் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது கசப்பான உணவு என்றாலும் பல நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் உடலில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

வயிறு தொடர்பான பிரச்சனைகள், கல்லீரல் மற்றும் ஆஸ்துமா உள்ள நோயாளிகளுக்கும் பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால், பாகற்காயை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

ஆனால், பாகற்காய் சாப்பிட்ட பிறகு, சில பொருட்களை சாப்பிடவே கூடாது இது உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிட்ட பிறகு எந்த உணவுகளை சாப்பிட்டக் கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிடக்கூடாது?

பால்

பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் சாப்பிடக் கூடாது. இது உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது வயிற்றில் மலச்சிக்கல் வலி மற்றும் எரியும் பிரச்சினைகள் உருவாக்கலாம். இது தவிர, உங்களுக்கு ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அது உங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறலாம்.

முள்ளங்கி

பாகற்காய் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கி அல்லது முள்ளங்கியில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. இதுவும் உங்களுக்கு எல்லாவிதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். உண்மையில், முள்ளங்கி மற்றும் பாகற்காயின் தன்மை வேறுபட்டது, இதன் காரணமாக அவை வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளியை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் ஏற்கனவே சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், பாகற்காய்க்குப் பிறகு முள்ளங்கியை உட்கொள்ளக்கூடாது.

மாம்பழம்

பாகற்காய் கசப்பாகவும், மாம்பழம் இனிப்பாகவும் இருக்கும். பாகற்காய் சாப்பிட்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது உங்கள் வாயின் சுவையை கெடுக்கும். அவற்றை ஒன்றாக அல்லது தனித்தனியாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வாந்தி, எரியும் உணர்வு, குமட்டல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். உண்மையில், இந்த இரண்டு விஷயங்களையும் ஜீரணிக்க நேரம் ஆகலாம்.

தயிர்

உணவுடன் தயிர் அல்லது மோர் அருந்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் நீங்கள் பாகற்காய் உடன் தயிர், மோர் உட்கொண்டால் பெரும் தீங்கு விளைவிக்கும். இதில் காணப்படும் லாக்டிக் அமிலம், பாகற்காய் உள்ள ஊட்டச்சத்துக்களுடன் எதிர்வினை புரிகிறது. இதனால் தோல் தடிப்புகள் மற்றும் அரிப்பு ஏற்படலாம். எனவே, பாகற்காய் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடவே கூடாது.

Image Source: FreePik

Read Next

Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.! பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்க..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்