Doctor Verified

சாம்பிராணி புகை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.? மருத்துவர் விளக்கம்..

சாம்பிராணி புகை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? முடி கொட்டுதல் குறையும், எலும்புகள் வலுவாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உண்மையா? மருத்துவர் ஐசக் அப்பாஸ் பகிர்ந்த மருத்துவ விளக்கம்.
  • SHARE
  • FOLLOW
சாம்பிராணி புகை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.? மருத்துவர் விளக்கம்..


தமிழக வீடுகளில் பல தலைமுறையாக சாம்பிராணி புகை காட்டுவது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. "இதனால் குழந்தைகளின் முடி கொட்டுதல் குறையும், எலும்புகள் வலுவாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்ற நம்பிக்கைகள் பரவலாகக் கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த நம்பிக்கைகளுக்கு மருத்துவ ஆதாரம் உள்ளதா? என்பதற்கான விளக்கத்தை மருத்துவர் டாக்டர் ஐசக் அப்பாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாம்பிராணி என்றால் என்ன?

சாம்பிராணி என்பது Indian Frankincense என்ற மரத்தின் கட்டைகளால் தயாரிக்கப்படுகிறது. இது எரியும்போது இனிமையான வாசனையைக் கொடுக்கிறது. பலருக்கு சுகமான உணர்வை ஏற்படுத்தினாலும், மருத்துவர் விளக்கமளிப்பதாவது:

சாம்பிராணி புகையில் PAHs (Polycyclic Aromatic Hydrocarbons), Carbon Monoxide, Formaldehyde போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

குழந்தைகளின் சுவாச முறை

பெரியவர்கள் ஒரு நிமிடத்திற்கு சுமார் 12–16 முறை மூச்சை இழுக்கின்றனர். ஆனால் குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கு 30–60 முறை வரை சுவாசிக்கின்றனர்.

காரணம், குழந்தைகளின் நுரையீரல் மற்றும் உடல் உறுப்புகள் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதால், அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் புகையில் உள்ள நச்சுக்களை அவர்கள் அதிகமாக சுவாசிக்க நேரிடுகிறது.

இதன் விளைவாக, சுவாசக்குழாய் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் Sudden Infant Death Syndrome (SIDS) எனப்படும் திடீர் குழந்தை மரண அபாயம் ஏற்படலாம். இதை American Academy of Pediatrics கூட எச்சரித்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சலா.? கவலைப்பட வேண்டாம்.. மருத்துவர் விளக்கம்.. 

சிகிரெட் புகை = சாம்பிராணி புகை

பலர் சிகிரெட் புகை மற்றும் சாம்பிராணி புகை வித்தியாசமானவை என்று நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவர் ஐசக் அப்பாஸ் கூறுகையில் “குழந்தைகளைப் பொறுத்தவரை, இரண்டும் ஒரே மாதிரியான அபாயத்தையே தருகின்றன. வித்தியாசம் ஒன்றே. சிகிரெட்டில் துர்நாற்றம் இருக்கும், சாம்பிராணியில் இனிய வாசனை இருக்கும்” என்றார்.

அதாவது, வாசனை இனிமையாக இருந்தாலும், புகையில் உள்ள நச்சுகள் குழந்தையின் உடலை பாதிப்பதில் மாற்றமில்லை.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

* குழந்தைகளின் அருகில் சாம்பிராணி புகையை எரிக்க வேண்டாம்.

* வீட்டுக்குள் காற்றோட்டம் நிறைய ஏற்படுத்துங்கள்.

* புகை இல்லாத, ஆரோக்கியமான சூழலை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

* பாரம்பரிய நம்பிக்கைகளை விட, மருத்துவ ரீதியான தகவல்களைப் பின்பற்றுங்கள்.

View this post on Instagram

A post shared by Dr. Isacc Abbas (@dr.isaccabbas)

இறுதியாக..

சாம்பிராணி புகை குழந்தைகளுக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கை தவறானது. மருத்துவ ரீதியாக, அதில் உள்ள நச்சுக்கள் குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கின்றன, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றன, மேலும் திடீர் குழந்தை மரணம் (SIDS) அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். எனவே பெற்றோர் சாம்பிராணி புகையை குழந்தைகளின் அருகில் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.

{Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவர் பகிர்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு குழந்தையின் உடல்நலம் மாறுபடும். எனவே குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.}

Read Next

இந்த 5 உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.. மருத்துவர் அறிவுரை..

Disclaimer