Panju Mittai: பஞ்சு மிட்டாய்க்கு டாட்டா சொன்ன தமிழக அரசு.! அதிரடி உத்தரவு..

  • SHARE
  • FOLLOW
Panju Mittai: பஞ்சு மிட்டாய்க்கு டாட்டா சொன்ன தமிழக அரசு.! அதிரடி உத்தரவு..

மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்களான ரோடமைன் பி, பஞ்சு மிட்டாயில் கலந்திருப்பதை உறுதி செய்து, தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் தடை விதித்துள்ளது. 

இதையும் படிங்க: Side Effects of Milk: எச்சரிக்கை… தினமும் 3 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் ஆபத்து!

அரசு ஆய்வகம் நடத்திய சோதனையில், கேன்சரை ஏற்படுத்தும் இரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் ரோடமைன் பி கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல், பேக்கேஜிங் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சுப்பிரமணியன் கூறினார்.

Read Next

Side Effects of Milk: எச்சரிக்கை… தினமும் 3 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் ஆபத்து!

Disclaimer

குறிச்சொற்கள்