Doctor Verified

டாக்டர் சிவராமன் சொல்லும் ‘காலைக் கடன்’ ரகசியம்!

காலை நேர மலச்சிக்கல் மனிதனின் முழு ஆரோக்கியத்தையும் எப்படி பாதிக்கிறது? டாக்டர் சிவராமன் கூறும் காரணங்கள், குழந்தைகள் & பெரியவர்களுக்கான இயற்கை சிகிச்சை வழிமுறைகள் இங்கே. 
  • SHARE
  • FOLLOW
டாக்டர் சிவராமன் சொல்லும் ‘காலைக் கடன்’ ரகசியம்!

முன்னோர் காலத்திலிருந்தே “மலம் என்பது காலைக் கடன்” என்று கூறப்பட்டு வருகிறது. இதை மருத்துவ ரீதியில் விளக்கும் போது, ஒரு மனிதனின் செரிமான ஆரோக்கிய நிலை காலை நேரத்தில் எத்தனை எளிதாக மலம் கழிக்கிறார் என்பதிலேயே பெரும்பாலும் தெரியும் என்று இயற்கை மருத்துவர் டாக்டர் சிவராமன் தெரிவிக்கிறார்.


முக்கியமான குறிப்புகள்:-


காலை எழுந்த உடனே எந்த சிரமமும் இன்றி மலம் கழித்துவிட வேண்டும். ஆனால், காபி குடித்த பிறகோ, நடைப்பயிற்சி செய்த பிறகோ தான் மலம் கழிக்க முடிகிறது என்ற நிலை இருந்தால், அது மலச்சிக்கலின் முக்கிய அறிகுறி என்று அவர் எச்சரிக்கிறார்.

மலச்சிக்கல் ஏற்படும் முக்கிய காரணங்கள்

  • செரிமானக்கோளாறு
  • நீர்ச்சத்து குறைபாடு
  • நார்ச்சத்து குறைவான உணவு
  • உடற்பயிற்சி இல்லாமை
  • தூக்கமின்மை

இவை காரணமாக மலச்சிக்கல் ஏற்பட்டால், பசி குறைவு, உடல் சோர்வு போன்ற பல பிரச்சனைகள் உருவாகும் என அறிவுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கான மலச்சிக்கல் தீர்வு

மலச்சிக்கல் அதிகம் காணப்படும் வயது பிரிவு குழந்தைகள். இதனைத் தணிக்க எளிய வழிமுறைகளைக் கூறும் டாக்டர் சிவராமன்:

  • 4–5 காய்ந்த திராட்சைகளை தண்ணீரில் ஒரு இரவு ஊறவைத்து, காலை நேரத்தில் குழந்தைக்கு கொடுத்தால், மலம் எளிதில் கழிக்க முடியும்.
  • இது குழந்தைகளின் செரிமான மண்டலத்தையும் நன்றாக சீர்படுத்தும்.

மேலும், கடுக்காய் பிஞ்சு எண்ணெயில் வறுத்து பொடியாக்கி மருந்தாக கொடுத்தால், அது குழந்தைகளின் செரிமானத்தை நன்றாக இயங்கச் செய்யும் என்றார்.

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற.. இந்த பழங்களை சாப்பிடுங்கள்..

பெரியவர்களுக்கு இயற்கையான தீர்வு

பெரியவர்களின் மலச்சிக்கலை விரைவாக தணிக்க:

  • நிலவாகை பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
  • இரவு நேரத்தில் அரை டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொண்டால், அடுத்த நாள் காலை மலம் இயல்பாக வெளியேறும்
  • அவ்வாறே, பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்

சரியான மலம் கழித்தல் – ஆரோக்கியத்தின் அடையாளம்

ஒரு நாளை ஆரோக்கியமாக தொடங்குவதற்கு செரிமானம் சீராக இருக்க வேண்டும். அதற்கான முதல் அடையாளம், சிரமமின்றி மலம் கழித்துவிடும் திறன். இதுவே “காலைக் கடன்” என முன்னோர்கள் எடுத்துக்காட்டியது என அவர் வலியுறுத்துகிறார்.

இறுதியாக..

மலச்சிக்கல் என்பது சாதாரண பிரச்சனை போல தோன்றினாலும், அது உடலின் செரிமானமும், நீர்ச்சத்து சமநிலையும், முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும் முக்கிய காரணமாகும். காலை எழுந்த உடனே இயல்பாக மலம் கழிக்க முடிவது உடல் நலத்தின் அடிப்படை அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயற்கையான முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மலச்சிக்கலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

Disclaimer: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் மருத்துவ நிபுணர்களின் பொது ஆலோசனைகள். ஏற்கனவே உடல் நலக்குறைவு இருந்தால் மருத்துவரின் தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

இயற்கையாகவே வைட்டமின் டி-யை அதிகரிக்க இந்த 7 குறிப்புகளை நீங்க பின்பற்றுங்க.. மருத்துவர் ஹன்சாஜி தரும் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 28, 2025 13:49 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Nov 28, 2025 13:49 IST

    Published By : Ishvarya Gurumurthy