அழகு பராமரிப்பில் இயற்கை வழிகள் எப்போதும் பாதுகாப்பானதும், சிறந்த பலன்களையும் தரக்கூடியவையாகும். அந்த வகையில், Rice Toner உங்கள் சருமத்திற்கு பளபளப்பைத் தருவதோடு, பல்வேறு சருமப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என தோல் நிபுணர் டாக்டர் ஷரின் பாத்திமா பரிந்துரைக்கிறார்.
Rice Toner எப்படி தயாரிப்பது?
* சிறிது அரிசியை கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.
* பின்னர் அரிசியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
* அரைத்த கலவையை பருத்தித் துணியில் போட்டு வடிகட்டவும்.
* வடிகட்டிய பால் போன்ற திரவத்தில் சிறிது பால் சேர்க்கவும்.
* குளிர வைக்கப்பட்டதும் பயன்படுத்த தயாராகும்.
Rice Toner-ஐ எப்படி பயன்படுத்துவது?
* டோனரை ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து குளிர வைத்துக் கொள்ளவும்.
* முகம் கழுவிய பிறகு, இந்த டோனரை மெதுவாக முகத்தில் தெளிக்கவும்.
* தினசரி பயன்படுத்தினால் இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
* விலையுயர்ந்த face pack, mask போன்றவற்றிற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.
Rice Toner-ன் நன்மைகள்
* சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
* வறண்ட சருமத்தை சரிசெய்யும்.
* முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தரும்.
* இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக்க உதவும்.
* சருமத்தில் இயற்கையான பளபளப்பைத் தரும்.
* தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்கும்.
{Disclaimer: இங்கு கூறப்பட்ட Rice Toner தயாரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான குறிப்புகள் தோல் மருத்துவர் டாக்டர் ஷரின் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் தோல் தன்மை மாறுபடும்; எனவே, எந்தவொரு புதிய வீட்டு வைத்தியத்தையும் பயன்படுத்துவதற்கு முன், தங்களின் தனிப்பட்ட மருத்துவர் அல்லது தோல் நிபுணரின் ஆலோசனையை பெறுவது மிக அவசியம். ஏதேனும் ஒவ்வாமை, அரிப்பு, சிவப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, மருத்துவ ஆலோசனை பெறவும்.}